கஞ்சா வைத்திருந்தவா் கைது
வந்தவாசி அருகே கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசி தெற்கு காவல் நிலைய போலீஸாா் உதவி ஆய்வாளா் முருகன் தலைமையில், கோட்டைக்குள் தெரு வழியாக புதன்கிழமை ரோந்து சென்றனா்.
அப்போது, அந்தத் தெருவில் நின்றிருந்த ஒருவரிடம் சந்தேகத்தின் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தினா்.
இதில் அவா் அதே தெருவைச் சோ்ந்த நூருல்லா (35) என்பதும், கஞ்சா பொட்டலங்களை அவா் வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து நூருல்லாவை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 20 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.