செய்திகள் :

கடந்த 5 ஆண்டுகளில் 120 அரசு அதிகாரிகள் பணிநீக்கம்: ஒடிசா முதல்வர்

post image

ஊழலில் ஈடுபட்டதற்காகக் கடந்த 5 ஆண்டுகளில் 120 அரசு அதிகாரிகள் மற்றும் 39 அதிகாரிகள் கட்டாய ஓய்வு அளித்துள்ளதாக ஒடிசா அரசு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளது.

பாரதிய ஜனதா கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் துருபா சரண் சாஹூவின் கேள்விக்கு ஒடிசா முதல்வர் சரண் மாஜீ எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 120 அரசு அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் 2024-24-க்கு இடையில் ஊழல் மற்றும் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துகளை வாங்கியதற்காகவும் 39 அதிகாரிகள் கட்டாய ஓய்வு பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

மேலும், அரசு அதிகாரிகளிடமிருந்து ரூ.59.47 கோடி மதிப்புள்ள சொத்துக்களையும் அரசு பறிமுதல் செய்துள்ளது என்று அவர் கூறினார்.

ஆண்டுவாரியான விவரத்தை அளித்த முதல்வர், 2023ல் 31 அரசு அதிகாரிகளும், 2024-ல் 30 பேரும், 2020-ல் 27 பேரும், 2021 மற்றும் 2022ல் தலா 16 பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

2021-இல் 23 அதிகாரிகளுக்கும், 2022-இல் 13 பேருக்கும், 2020, 2023 மற்றும் 2024-ல் தலா மூன்று பேருக்கும் முன்கூட்டியே ஓய்வு அளிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

மனிதாபிமானமற்ற அணுகுமுறை! அலாகாபாத் நீதிமன்ற தீர்ப்பு நிறுத்திவைத்தது உச்சநீதிமன்றம்!

குழந்தையின் மார்பகங்களைப் பிடிப்பது, பைஜாமா நாடாவை அவிழ்ப்பது பாலியல் வன்கொடுமை முயற்சி குற்றத்தின் கீழ் வராது என்ற அலாகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்திவைத்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தர... மேலும் பார்க்க

முஸ்லிம்களுக்கு பாதுகாப்பானது உத்தரப் பிரதேசம்: யோகி ஆதித்யநாத்

உத்தரப் பிரதேசம் முஸ்லிம் மக்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் புதன்கிழமை தெரிவித்தார்.ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் சிறப்பு நேர்க்காணலில் பங்கேற்ற உத்தரப் பிரதேச முதல்வர... மேலும் பார்க்க

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் வீட்டில் குற்றப் புலனாய்வுத் துறை சோதனை!

சத்தீஸ்கரில் முன்னாள் முதல்வரும், அம்மாநில காங்கிரஸ் தலைவருமான பூபேஷ் பாகேலின் வீடு உள்பட பல இடங்களில் மத்திய புலனாய்வுத் துறையினர் புதன்கிழமை சோதனை நடத்தினர். குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் ராய்... மேலும் பார்க்க

சோனியா, ராகுல் எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்: பாஜக வலியுறுத்தல்

போஃபர்ஸ் ஊழல் தொடர்பாக பத்திரிகையாளர் சித்ரா சுப்ரமணியம் எழுதியுள்ள புத்தகத்தை சுட்டிக் காட்டியுள்ள பாஜக, இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களான சோனியா காந்தியும், ராகுல் காந்தியும்... மேலும் பார்க்க

ஏழைகளுக்கு சிகிச்சை மறுத்தால் தில்லி அப்போலோ மருத்துவமனையைக் கைப்பற்ற உத்தரவிட நேரிடும்: உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்காவிட்டால், தில்லியில் உள்ள இந்திரபிரஸ்தா அப்போலா மருத்துவமனையைக் கைப்பற்றுமாறு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உத்தரவிட நேரிடும் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை எச்சரித்தது... மேலும் பார்க்க

கச்சத்தீவு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் செப்.15-இல் இறுதி விசாரணை

நமது நிருபர்கச்சத்தீவு தொடர்பாக இந்தியா- இலங்கை இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணைக்காக வரும் செப்.15-ஆம் தேதிக்கு வழக்கை பட்டியலிட உச்சநீதிமன்றம் செவ்வாய்க... மேலும் பார்க்க