செய்திகள் :

கடந்த 7 நாள்களில் 5,037 பேருக்கு கரோனா!

post image

அமெரிக்கா மற்றும் ஆசியாவில் கடந்த 7 நாள்களில் 5,037 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கரோனா பாதிப்பானது சிங்கப்பூர், ஹாங் காங், தாய்லாந்து, சீனா உள்ளிட்ட நாடுகளில் திடீரென அதிகரித்து வருவதாகவும், இந்தியாவைப் பொறுத்தவரை கேரளத்தில் அதிக பாதிப்புகள் பதிவாகிவருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

தற்போதைய கரோனா பரவலுக்கு ஒமைக்ரானின் திரிபு வகையான ஜே.என். 1, என்பி.1.8.1 மற்றும் எல்எஃப் .7 ஆகியவையே காரணம் என உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

உலக நாடுகளைப் பொறுத்தவரை அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் மட்டுமே கரோனா பரவல் தற்போது அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் கலிஃபோர்னியா, வாஷிங்டன், விர்ஜினியா மற்றும் நியூ யார்க் ஆகிய நகரங்களில் என்பி.1.8.1 மற்றும் எல்எஃப் .7 வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளன.

இந்தியாவில் கரோனா பரவல்

இந்தியாவைப் பொறுத்தவரை கேரளத்தில் அதிக கரோனா பாதிப்புகள் பதிவாகிவருகின்றன. இதுவரை 430 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரம், தில்லி, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் கரோனா பரவல் காணப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமையான நேற்று மட்டும் மகாராஷ்டிரத்தில் 43 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 209ஆக அதிகரித்துள்ளது. மேற்கு வங்கத்தில் 4 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. ஜார்க்கண்ட்டில் முதல்முறையாக ஒருவருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது.

தாணேயில் 21 வயது இளைஞர் கரோனா பாதிப்பால் சமீபத்தில் உயிரிழந்தார். மும்பையில் கரோனா பாதிப்புக்கு 4 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். இவர்களில் பெருபாலானோர் இளைஞர்களே.

இதனால், 18 வயது பூர்த்தி அடைந்த பலரும் கரோனா பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர். இதுவரை ஒமைக்ரான் பூஸ்டர் தடுப்பூசியை வெறும் 18% மக்கள் மட்டுமே போட்டுக்கொண்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை விதியை நீக்கியது கனரா வங்கி

வங்கி சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாத வாடிக்கையாளர்களுக்கு எந்த அபராதமும் விதிக்கப்படாது என கனரா வங்கி அறிவித்துள்ளது.இந்தியாவின் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் என அனைத்த... மேலும் பார்க்க

வடகிழக்கில் கொட்டித் தீர்க்கும் மழை: நிலச்சரிவுக்கு 26 பேர் பலி!

வடகிழக்கு மாநிலங்களில் கொட்டித் தீர்க்கும் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 26 பேர் பரிதாபமாக பலியாகினர்.ஏழு சகோதரிகள் என்றழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 3 நாள்களாகப் பெய்து வரும் கனமழைய... மேலும் பார்க்க

மே. வங்கத்தை வடகொரியாவாக மாற்றாதீர்கள்! இன்ஸ்டா பிரபலம் கைது விவகாரத்தில் வலுக்கும் எதிர்ப்பு!

கொல்கத்தாவில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து அவதூறு பரப்பியதாக இன்ஸ்டாகிராம் பிரபலம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது ஆதரவ... மேலும் பார்க்க

தில்லியில் சிஎன்ஜி சிலிண்டர் வெடித்ததில் 2 குழந்தைகள் பலி

தில்லியில் சிஎன்ஜி சிலிண்டர் வெடித்ததில் சிகிச்சைப் பலனின்றி 2 குழந்தைகள் பலியானார்கள். வடகிழக்கு தில்லியின் சுந்தர் நக்ரியில் பழைய சிஎன்ஜி சிலிண்டர்களை பழுதுபார்க்கும் கிடங்கு உள்ளது. இங்கு சனிக்கிழம... மேலும் பார்க்க

உ.பி.: மண்டபத்தில் திருமண விழா நடத்தியதற்காக தலித் குடும்பத்தினர் மீது தாக்குதல்

உத்தரப் பிரதேசத்தில் மண்டபத்தில் திருமண விழா நடத்தியதற்காக தலித் குடும்பத்தினரை கும்பல் ஒன்று தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ரஸ்ராவில் உள்ள மண்டபம் ஒன்றில் தலித் ச... மேலும் பார்க்க

போருக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தானின் முதல் சந்திப்பு!

இந்தியா - பாகிஸ்தான் போரையடுத்து, இரு நாடுகளும் முதன்முறையாக சந்தித்துள்ளன. தஜிகிஸ்தான், சிங்கப்பூரில் நடைபெற்ற கூட்டங்களில் இந்தியா உள்பட பல நாடுகளும் கலந்து கொண்டன. பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் ... மேலும் பார்க்க