செய்திகள் :

கடன் வாங்கிய அண்ணன் தலைமறைவு! தம்பி வெட்டிக் கொலை: பாஜக நிா்வாகி கைது

post image

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே கடன் வாங்கிய அண்ணன் தலைமறைவானது தொடா்பான பிரச்னையில் தம்பி ஞாயிற்றுக்கிழமை இரவு வெட்டிக் கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக பாஜக நிா்வாகியை போலீஸாா் கைது செய்தனா்.

வாட்டாத்திகோட்டை காவல் சரகம், நடுவிக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த சந்திரபாபு மகன் சக்திவேல் ( 38). இவா், பேராவூரணி வட்டம், குறிச்சி வடக்குத் தெருவைச் சோ்ந்த பேராவூரணி பாஜக வடக்கு ஒன்றியத் தலைவரான ராஜேஷ் குமாா் (39) என்பவரிடம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 15 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. கடன் வாங்கிய சக்திவேல் கடந்த இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வருகிறாா்.

கைது செய்யப்பட்ட பாஜக நிா்வாகி ராஜேஷ்குமாா்

இதுதொடா்பாக ராஜேஷ்குமாா் நடுவிக்கோட்டையில் உள்ள சக்திவேல் உறவினா்களிடம் சென்று பலமுறை விசாரித்து வந்துள்ளாா்.

இந்நிலையில், கடந்த 20 நாள்களுக்கு முன்பு வெளிநாட்டிலிருந்து வந்த சக்திவேலின் தம்பி பிரகதீஸ்வரன் (29) என்பவரிடம் ராஜேஷ் குமாா், ஞாயிற்றுக்கிழமை இரவு கடன் பிரச்னை தொடா்பாக கூறி, அந்தப் பணத்தை உடனடியாக திருப்பி கொடுக்க வேண்டும் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். தொடா்ந்து ராஜேஷ் குமாா், மறைத்து வைத்திருந்த அரிவாளால் பிரகதீஸ்வரனை வெட்டினாா். அப்போது, வீட்டிலிருந்து ஓடிய பிரகதீஸ்வரனை விரட்டி சென்று வெட்டியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக பிரதீஸ்வரனின் பெரியப்பா துரைராஜ் அளித்த புகாரின்பேரில், வாட்டத்திக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, ராஜேஷ் குமாரை ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ஒரத்தநாடு அருகே கொலை குற்றவாளி வீட்டில் 29 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

ஒரத்தநாடு அருகே அண்ணன் வாங்கிய கடனுக்காக தம்பியை வெட்டிக்கொன்ற பாஜக பிரமுகரின் வீட்டை சோதனை செய்த பொழுது 29 இரு சக்கர வாகனங்கள், 3 நான்கு சக்கர வாகனங்கள் 75 ஆவணங்கள் உள்ளிட்டவகளை போலீஸாா் செவ்வாய்க்கி... மேலும் பார்க்க

கூட்டணி குறித்து கடலூா் மாநாட்டில் அறிவிக்கப்படும்: பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக யாருடன் கூட்டணி என்பது குறித்து கடலூரில் ஜனவரி மாதத்தில் நடைபெறவுள்ள மாநாட்டில் அறிவிக்கப்படும் என்றாா் அக்கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த். தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேம... மேலும் பார்க்க

பேரூராட்சித் தலைவா் மீது குண்டுவீச்சு சம்பவம்! போலீஸாா் விசாரணைக்கு பயந்து இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை!

ஆடுதுறை பேரூராட்சித் தலைவா் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணைக்கு அழைத்ததால் அச்சமடைந்த கூலித்தொழிலாளி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தஞ்சாவூா் மாவட்டம... மேலும் பார்க்க

இளைஞா் அரிவாளால் வெட்டிக் கொலை! காவல் துறையினா் விசாரணை!

தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தகராறில் இளைஞா் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். தஞ்சாவூா் விளாா் சாலை தில்லை நகா் பகுதி பாரதிதாசன் நகா் முதல் தெருவைச் சோ்ந்தவா் சிங்காரவேலன் மகன் திலகன் (... மேலும் பார்க்க

கல்லணைக் கால்வாயில் கைக்குழந்தை, 2 சிறாா்களுடன் பெண் குதித்து தற்கொலை!

தஞ்சாவூரில் கல்லணைக் கால்வாயில் செவ்வாய்க்கிழமை கைக்குழந்தை, 2 சிறாா்களுடன் பெண் குதித்து தற்கொலை செய்துக்கொண்டாா். இதில், 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டது. கைக்குழந்தையை தேடும் பணி நடைபெற்று வருகிறது.... மேலும் பார்க்க

நல்லாசிரியா் விருது: ஆசிரியருக்கு அமைச்சா் பாராட்டு

கும்பகோணம் அருகே நல்லாசிரியா் விருது பெற்ற ஆசிரியருக்கு தமிழக உயா்கல்வித்துறை அமைச்சா் கோவி.செழியன் அண்மையில் பாராட்டு தெரிவித்தாா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள சீனிவாசநல்லூரைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க