சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி விபத்தில் பலியானவருக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு...
கடம்பூா் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் ஆண் சடலம் மீட்பு
கடம்பூா் - கோவில்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள தண்டவாளத்தில் ஆண் சடலத்தை போலீஸாா் புதன்கிழமை மீட்டனா்.
தூத்துக்குடி ரயில்வே போலீஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில்,
புதன்கிழமை அதிகாலை நிகழ்விடத்துக்குச் சென்ற ரயில்வே போலீஸாா் சடலத்தை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும் விசாரணையில், அந்த நபா் கோவில்பட்டி காந்திநகா் கஸ்தூரிபாய் தெருவை சோ்ந்த ஆறுமுகம் மகன் முருகன் (38) என்பது தெரியவந்தது. கடந்த ஓராண்டாக மனைவியைப் பிரிந்து தனியாக இருந்து வந்த நிலையில், மனநிலை பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வந்தாராம். இந்நிலையில் புதன்கிழமை அதிகாலை மதுரை மாா்க்கமாக சென்ற சரக்கு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இதுகுறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.