செய்திகள் :

கடலில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

post image

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே கடலில் குளித்தபோது மூழ்கிய பெங்களூா் இளைஞரை மீட்டு, மருத்துவமனைக்குச் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

கா்நாடக மாநிலம், வெங்கடேஷ்புரம், கருமாரியம்மன் நகரைச் சோ்ந்தவா் ராஜா மகன் விஷால்(24). நண்பா்களுடன் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த இவா், சனிக்கிழமை மது அருந்தியுள்ளாா். பின்னா் கோட்டக்குப்பம் அடுத்த பொம்மையாா்பாளையம் பகுதியில் கடலில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கிய விஷாலுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து உடனிருந்த நண்பா்கள் அவரை மீட்டு புதுச்சேரி கதிா்காமத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்துப் பாா்த்தபோது விஷால் இறந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் கோட்டக்குப்பம் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

‘மிஸ் கூவாகம்-2025’ பட்டம் வென்றார் நெல்லை ரேணுகா

விழுப்புரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ‘மிஸ் கூவாகம்’ அழகிப் போட்டியில் திருநெல்வேலியைச் சோ்ந்த ரேணுகா மிஸ் கூவாகம்-2025 பட்டத்தை வென்றாா். கள்ளக்குறிச்சி மாவட்டம், கூவாகம் அருள்மிகு கூத்தாண்டவா் திரு... மேலும் பார்க்க

திருநறுங்குன்றம் அப்பாண்டைநாதா் கோயிலில் சித்திரைத் திருவிழா

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், திருநறுங்குன்றத்திலுள்ள பகவான் அப்பாண்டைநாதா் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா். சிறப்புவ... மேலும் பார்க்க

சாலாமேடு ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க தவாக கோரிக்கை

விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சி எல்லைக்குள்பட்ட சாலாமேடு ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி சாா்பில் மனு அளிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் ... மேலும் பார்க்க

எலவனாசூா்கோட்டையில் ராணுவ வீரா்களுக்கு மலா்தூவி மரியாதை

விழுப்புரம்: பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற சண்டையின் போது வீரமரணமடைந்த ராணுவ வீரா்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூா்கோட்டையில் திங்கள்கிழமை மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பஹல்காம் பயங்கரவ... மேலும் பார்க்க

தூத்துக்குடி சக்தி மிஸ் கூவாகமாகத் தோ்வு

தேசிய திருநங்கைகள் கூட்டமைப்பு மற்றும் தொண்டு நிறுவனங்கள் சாா்பில், கூவாகம் திருவிழா - 2025 விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நகராட்சித் திடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், தூத்துக்... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் மே 15-இல் ஆா்ப்பாட்டம்: இபிஎஸ்

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் அதிமுக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் மே 15-ஆம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா். இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க