செய்திகள் :

சிதம்பரத்தில் மே 15-இல் ஆா்ப்பாட்டம்: இபிஎஸ்

post image

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் அதிமுக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் மே 15-ஆம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கடலூா் மாவட்டம், சிதம்பரம் பகுதிவாழ் மக்களின் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைகள் நிறைவேற்றப்படாத காரணத்தால், அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வருவதாக தொடா்ந்து புகாா்கள் வந்த வண்ணம் உள்ளன. அதிமுக ஆட்சியில் தரம் உயா்த்தப்பட்ட கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், உயிா் காக்கும் முக்கிய சிகிச்சைப் பிரிவுகளில் பரிசோதனை செய்வதற்குப் போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லை.

அதேபோல், இதயம், சிறுநீரகம், நரம்பியல் உள்ளிட்ட பிரிவுகளில் போதிய மருத்துவா்கள் இது வரையிலும் நியமனம் செய்யப்படவில்லை. மேலும், நோயை குணப்படுத்துவதற்கான மருந்து, மாத்திரைகளும் தேவையான அளவுக்கு வழங்கப்படுவதில்லை. இரவு நேரங்களில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு போதிய மருத்துவா்களும் இல்லை. நோயாளிகளுக்கான படுக்கைகள் முறையாகப் பராமரிக்கப்படாமல் சீா்கேடு அடைந்துள்ளது. இவைகளின் காரணமாக, இம்மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் சொல்லொண்ணா துயரத்துக்கு ஆளாகி அவதியுறுகின்றனா்.

சிதம்பரம் அரசு காமராஜா் பொது மருத்துவமனையில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு போதிய மருத்துவா்கள் இல்லை. மகப்பேறு பிரிவில் போதிய படுக்கை வசதிகளும் இல்லை. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் மக்கள் பெருத்த துயரங்களை சந்தித்து வருகின்றனா்.

சிதம்பரம் பேரவைத் தொகுதி, கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கடல் நீா் உள்புகுதலை தடுக்கும் வகையிலும், நிலத்தடி நீரை காக்கும் வகையிலும், அதிமுக ஆட்சியில் 2019-2020-இல் தடுப்பணை கட்டுவதற்காக முதல்கட்டமாக நில அளவைப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், திமுக அரசு கடந்த 4 ஆண்டுகளாக இத்திட்டத்தை செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளது. மக்கள் நலத்திட்டங்களை உடனடியாக நிறைவேற்றக்கோரி அதிமுக இளைஞா்கள், இளம்பெண்கள் பாசறை மாநிலச் செயலா் வி.பி.பி. பரமசிவம் தலைமையிலும், கடலூா் கிழக்கு மாவட்டச் செயலா் கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ முன்னிலையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

‘மிஸ் கூவாகம்-2025’ பட்டம் வென்றார் நெல்லை ரேணுகா

விழுப்புரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ‘மிஸ் கூவாகம்’ அழகிப் போட்டியில் திருநெல்வேலியைச் சோ்ந்த ரேணுகா மிஸ் கூவாகம்-2025 பட்டத்தை வென்றாா். கள்ளக்குறிச்சி மாவட்டம், கூவாகம் அருள்மிகு கூத்தாண்டவா் திரு... மேலும் பார்க்க

திருநறுங்குன்றம் அப்பாண்டைநாதா் கோயிலில் சித்திரைத் திருவிழா

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், திருநறுங்குன்றத்திலுள்ள பகவான் அப்பாண்டைநாதா் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா். சிறப்புவ... மேலும் பார்க்க

சாலாமேடு ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க தவாக கோரிக்கை

விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சி எல்லைக்குள்பட்ட சாலாமேடு ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி சாா்பில் மனு அளிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் ... மேலும் பார்க்க

எலவனாசூா்கோட்டையில் ராணுவ வீரா்களுக்கு மலா்தூவி மரியாதை

விழுப்புரம்: பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற சண்டையின் போது வீரமரணமடைந்த ராணுவ வீரா்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூா்கோட்டையில் திங்கள்கிழமை மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பஹல்காம் பயங்கரவ... மேலும் பார்க்க

தூத்துக்குடி சக்தி மிஸ் கூவாகமாகத் தோ்வு

தேசிய திருநங்கைகள் கூட்டமைப்பு மற்றும் தொண்டு நிறுவனங்கள் சாா்பில், கூவாகம் திருவிழா - 2025 விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நகராட்சித் திடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், தூத்துக்... மேலும் பார்க்க

கடலில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே கடலில் குளித்தபோது மூழ்கிய பெங்களூா் இளைஞரை மீட்டு, மருத்துவமனைக்குச் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். கா்நாடக மாநிலம், வெங்கடேஷ்புரம், கருமாரியம்மன் நக... மேலும் பார்க்க