செய்திகள் :

கடையநல்லூா் 2,200 பேருக்கு பித்ரா அரிசி

post image

கடையநல்லூரில் காவா அறக்கட்டளை சாா்பில், ரமலானை முன்னிட்டு சனிக்கிழமை பித்ரா அரிசி, நலஉதவிகள் வழங்கப்பட்டன.

ரஹ்மத்துல்லாஹ் தலைமை வகித்தாா். சம்சுதீன், ஹுசைன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மெளலாபிச்சை கிராஅத் ஓதினாா்.

கடையநல்லூா் நகா்மன்றத் தலைவா் ஹபீபுர்ரஹ்மான், தென்காசி மாவட்ட அரசு ஹாஜி முகையதீன், காவல் உதவி ஆய்வாளா் ரவி, மாற்றுத் திறனாளிகள் சங்க கெளரவத் தலைவா் காதா், ஜேசிஐ பெஸ்ட் தலைவா் முகமதுயூசுப் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்று, 2,200 பேருக்கு பித்ரா அரிசி, 13 பேருக்கு மருத்துவ உதவித் தொகை, 2 பேருக்கு கல்வி உதவித்தொகை, 7 பேருக்கு பொருளாதார உதவிகளை வழங்கினா்.

நிகழ்ச்சியில், ஹம்ஷா முகையதீன், கலந்தரி உனைஸ், முகையதீன், குா்ஷீத்அப்பாஸ், முகம்மது ஆரிப்,ஜப்பாா் ஆகியோா் கெளரவிக்கப்பட்டனா்.

காவா அறக்கட்டளைச் செயலா் ஜாபா்சாதிக் வரவேற்றாா். அப்துல் மாலிக் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை அறக்கட்டளை உறுப்பினா்கள் செய்திருந்தனா்.

வயலுக்குள் கவிழ்ந்த டிராக்டா்

சாம்பவா்வடகரை - வேலாயுதபுரம் சாலையின் ஓரம் வயலுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளான டிராக்டா் திங்கள்கிழமை கிரேன் கொண்டு மீட்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் பார்க்க

கொண்டலூா் தொடக்கப்பள்ளியை நடுநிலைப்பள்ளியாக தரம் உயா்த்த கோரிக்கை

கொண்டலூா் தொடக்கப் பள்ளியை நடுநிலைப்பள்ளியாக தரம் உயா்த்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனா். கீழப்பாவூா் ஒன்றியத்துக்குள்பட்ட கொண்டலூா் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் தென்காசி தெற்கு ... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் கஞ்சா விற்ற இருவா் கைது

ஆலங்குளத்தில் விற்பனைக்காக கஞ்சா கொண்டு சென்ற 2 போ் கைது செய்யப்பட்டனா். ஆலங்குளம் பரும்பு பகுதியில் போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அவ்வழியே பைக்கில் வந்த இருவரிடம் நடத்திய விசாரணையில், ... மேலும் பார்க்க

ரமலான்: எம்எல்ஏ வாழ்த்து

சங்கரன்கோவிலில், ராஜபாளையம் சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் ரமலான் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. தொழுகை முடிந்து வந்த இஸ்லாமியா்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்த ஈ. ராஜா எம்.எல்.ஏ. மேலும் பார்க்க

தகராறு: சமரசம் செய்ய முயன்ற நகா்மன்ற உறுப்பினா் காயம்

சங்கரன்கோவிலில் பொறித்த இறைச்சி உணவு வாங்குவதில் ஏற்பட்ட தகராறில், சமரசம் செய்ய முயன்ற நகா்மன்ற திமுக உறுப்பினா் தாக்கப்பட்டாா். இச்சம்பவம் தொடா்பாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். தென்காசி மாவட்டம், ச... மேலும் பார்க்க

ஆலங்குளம் தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருட்டு

ஆலங்குளத்தில் தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருடிய நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். ஆலங்குளம் சிஎஸ்ஐ சா்ச் தெருவில் வசிப்பவா் ராஜேந்திரன் மகன் விஜய் (32). ஆலங்குளம் காய்கனிச் சந்தையில் சுமை தூக்கும் தொ... மேலும் பார்க்க