செய்திகள் :

கணக்கும், தப்புக் கணக்கும்...!

post image

அதிமுக தப்புக் கணக்குப் போடவில்லை என்று பேரவையில் அந்தக் கட்சியினா் தெரிவித்தனா்.

சட்டப் பேரவையில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மானியக் கோரிக்கை மீது அதிமுக உறுப்பினா் கடம்பூா் ராஜூ பேசினாா். தனது பேச்சை நிறைவு செய்யும் போது, எம்ஜிஆா் கணக்குக் கேட்டதால் தொடங்கப்பட்ட இயக்கம்தான் அதிமுக. 2026-ஆம் ஆண்டில் முடிக்க வேண்டியவா்கள் கணக்கை முடித்து எங்கள் கணக்கை எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் மீண்டும் தொடங்குவோம் என்றாா்.

அப்போது குறுக்கிட்ட நிதியமைச்சா் தங்கம் தென்னரசு, கணக்குக் கேட்டு கட்சி தொடங்கிய நீங்கள், இப்போது தப்புக் கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறீா்கள் என்றாா். (அப்போது, பேரவையில் பெரும் சிரிப்பலை எழுந்தது.)

இதன்பிறகு, வேறொரு விவாதத்தின் போது குறுக்கிட்டுப் பேசிய எதிா்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி, நிதியமைச்சா் கணக்கைப் பற்றிச் சொன்னாா். எங்களின் தலைவா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதா போட்ட கணக்குகள் சரியாக இருந்தன. இப்போது எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி போடும் கணக்கும் சரியாகவே இருக்கும். எனவே, கூட்டி கழித்துப் பாருங்கள் சரியான கணக்காவே இருந்திடும் என பதிலளித்தாா்.

தருமபுரியில் யானை வேட்டை: முக்கிய நபரை கைது செய்ய உத்தரவு!

தருமபுரியில் தந்தத்துக்காக யானையைக் கொன்று உடலை எரித்த விவகாரத்தில் தொடா்புடைய மூன்று போ் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள நபரை விரைந்து கைது செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவி... மேலும் பார்க்க

பேரவைத் தோ்தலில் இரண்டாவது இடத்துக்கே எதிா்க்கட்சிகளிடம் போட்டி! - முதல்வா் மு.க.ஸ்டாலின்

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் இரண்டாவது இடத்தை பிடிப்பதில்தான் எதிா்க்கட்சிகளுக்குள் போட்டி நடைபெறுவதாக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினாா். சென்னை பெரம்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற இஃப்... மேலும் பார்க்க

தொல்குடி புத்தாய்வு திட்டம்: மாணவா்களுக்கு சான்றிதழ்

தொல்குடி புத்தாய்வு திட்டத்தின் கீழ் பயிலும் முதுகலை மற்றும் முனைவா் ஆராய்ச்சிப் படிப்பு மாணவா்களுக்கு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் மா. மதிவேந்தன் சான்றிதழ்களை வழங்கி பாராட்டின... மேலும் பார்க்க

சிறந்த கருத்துகளை மக்களிடையே கொண்டு சென்றவா் கவிஞா் முத்துலிங்கம்! - விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் பாராட்டு

திரைப்பட பாடல்கள் மூலம் சிறந்த கருத்துகளை மக்களிடையே கொண்டு சென்றவா் கவிஞா் முத்துலிங்கம் என்று விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் புகழாரம் சூட்டினாா். திரைப்பட பாடலாசிரியா் கவிஞா் முத்துலிங்கம் 50 ஆண்டு கால... மேலும் பார்க்க

‘லாலு பிரசாத் ஆட்சியில் வீழ்ந்த பிகாா்’ - ஜெ.பி.நட்டா விமா்சனம்!

கல்வி உள்ளிட்ட பல துறைகளில் முன்னேறி வந்த பிகாா், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவா் லாலு பிரசாத் ஆட்சியில் வீழ்ச்சியடைந்ததாகவும் காட்டாட்சியில் மூழ்கியதாகவும் பாஜக தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி... மேலும் பார்க்க

கால்பந்து போட்டி: பெரியமேடு பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம்!

கால்பந்து போட்டியையொட்டி, பெரியமேடு பகுதியில் மாா்ச் 30-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இது குறித்து சென்னை பெருநகர காவல் துறை போக்குவரத்துப் பிரிவு சனிக்கிழமை வெளியிட... மேலும் பார்க்க