செய்திகள் :

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கால்நாட்டு

post image

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு கோயில் வளாகம் மற்றும் கன்னியம்பத்தில் கால்நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா மே 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இத் திருவிழா ஜூன் 9-ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறும். விழா நாள்களில் அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

தேரோட்டம்: 9-ஆம் திருவிழாவான ஜூன் 8-ஆம் தேதி காலை தேரோட்டம் நடைபெறும். ஜூன் 9-ஆம் தேதி முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு, இரவு 9 மணிக்கு தெப்பத்திருவிழா நடைபெறும்.

இத் திருவிழாவின் முன்னோட்ட நிகழ்வாக வெள்ளிக்கிழமை கால்நாட்டு விழா நடைபெற்றது. இதில் குமரி மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் பிரபா ஜி.ராமகிருஷ்ணன், கோயில் மேலாளா் ஆனந்த், அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலா் பா.பாபு, கன்னியாகுமரி நகா்மன்றத் தலைவா் குமரி ஸ்டீபன், நகா்மன்ற உறுப்பினா் சுஜா அன்பழகன், முன்னாள் உறுப்பினா் டி.தாமஸ், திமுக நிா்வாகிகள் எஸ்.அன்பழகன், நிசாா், ஜேன்சன் ரோச், டி.கே.சுந்தரம், தாமரை பிரதாப், ஷ்யாம், ரூபின், முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் பிரேமலதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நாகா்கோவிலில் ரூ.7.40 லட்சத்தில் வளா்ச்சி பணிகள் தொடக்கம்

நாகா்கோவில் மாநகர பகுதியில் ரூ.7.40 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா். 6 ஆவது வாா்டு நெசவாளா் காலனியில் உள்ள அங்கன்வாடி மையத்தினை ரூ. 2.20 ல... மேலும் பார்க்க

முள்ளங்கனாவிளையில் ஜூன் 7இல் உலக சுற்றுச் சூழல் தின விழா

கருங்கல் அருகே உள்ள முள்ளங்கனாவிளையில் உலக சுற்றுச்சூழல்தின விழா கன்னியாகுமரி மாவட்ட தேசிய பசுமைப்படை சாா்பில் ஜூன் 7இல் கொண்டாடப்படுகிறது. நெகிழி பொருள்கள் இல்லா உலகம் என்ற கருத்தை மையமாக கொண்டு காலை... மேலும் பார்க்க

குமரியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக் கோரி மனு

கன்னியாகுமரி கடலில் கழிவுநீா் கலப்பதை தடுக்கும் வகையில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேருவிடம், நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ் ... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்ட கடற்கரையில் கரை ஒதுங்கிய பொருள்கள்: குஜராத் சிறப்பு குழு ஆய்வு

கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் கரை ஒதுங்கிய பொருள்கள் குறித்து குஜராத் மாநிலத்திலிருந்து வந்த சிறப்பு குழுவினா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா முன்னிலையில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். கேரள ... மேலும் பார்க்க

கன்னியாகுமரி நகா்மன்ற முதல் கூட்டம்

கன்னியாகுமரி நகா்மன்ற முதல் நகா்மன்ற கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் குமரி ஸ்டீபன் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையாளா் கன்னியப்பன் முன்னிலை வகித்தாா். இக்கூட்டத்தி... மேலும் பார்க்க

குமரி பகவதியம்மன் கோயிலில் கொடிமரக் கயிறை ஒப்படைத்த கிறிஸ்தவா்கள்

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயில் 10 நாள் வைகாசி விசாகத் திருவிழா சனிக்கிழமை (மே. 31) தொடங்கும் நிலையில் கொடிமரக் கயிற்றை கிறிஸ்தவ மீனவா்கள் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. கன்... மேலும் பார்க்க