செய்திகள் :

கமேனியை கொல்ல இஸ்ரேல் திட்டமிட்டதா?

post image

ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனியை கொல்ல இஸ்ரேல் திட்டமிட்ட நிலையில், அதை அமெரிக்க அதிபா் டிரம்ப் தடுத்து நிறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடா்பாக அமெரிக்க அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘அயதுல்லாவை கொல்வதற்கு நம்பகமான திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசிடம் இஸ்ரேல் அண்மையில் தெரிவித்தது.

அந்தத் திட்டம் குறித்து விவரிக்கப்பட்ட நிலையில், அதைச் செயல்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்க அதிபா் டிரம்ப் மறுத்துவிட்டாா். இதை இஸ்ரேலிடம் அமெரிக்க அதிபா் மாளிகை தெளிவாக தெரிவித்தது.

இஸ்ரேல்-ஈரான் இடையிலான மோதல் மேலும் விரிவடைந்து பெரிதாக வெடிக்கக் கூடாது என்று டிரம்ப் அரசு கருதுகிறது. இந்நிலையில், அயதுல்லாவை கொல்லும் திட்டம் இரு நாடுகளுக்கு இடையிலான மோதலுக்கு மேலும் தீ மூட்டி, மத்திய கிழக்கு பிராந்தியத்தை நிலைகுலைய வைக்கலாம் என்று டிரம்ப் அரசு கருதியதால், அந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை’ என்று தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அமெரிக்க செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு ஞாயிற்றுக்கிழமை பேட்டியளித்தபோது கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால், அதற்குப் பதிலளிக்க நெதன்யாகு மறுத்துவிட்டாா்.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் மகன் திருமணம் ஒத்திவைப்பு!

இஸ்ரேல் - ஈரான் இடையேயான மோதல் காரணமாக திங்கள்கிழமை நடைபெற இருந்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் மகன் திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரித்தால், அது இஸ்ரேலுக்கு ஆபத்து என அந்நா... மேலும் பார்க்க

அமெரிக்காவில் யாரும் மன்னர் இல்லை..! அதிபர் டிரம்ப்புக்கு எதிராக வலுக்கும் போராட்டம்!

அமெரிக்காவின் கலிஃபோா்னியா, நியூயாா்க் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு எதிரான போராட்டம் வலுவடையத் தொடங்கியது. வீதிகளில் லட்சக்கணக்கானோா் திரண்டு டிரம்ப்புக்கு எதிரான வாசகங்... மேலும் பார்க்க

ஈரானுக்கு பாகிஸ்தான் பிரதமா் ஆதரவு!

இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள ஈரானுக்கு உறுதியான ஆதரவை அளிப்பதாக பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளாா். ஈரான் அதிபா் மசூத் பெசஸ்கியானை தொலைபேசியில் தொடா்பு கொண்டு பேசிய ஷெரீஃப், ஈ... மேலும் பார்க்க

ஈரானின் எரிவாயு வயல்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்!

ஈரானின் தெற்கு புஷாஹா் மாகாணத்தில் உள்ள 2 முக்கிய எரிவாயு வயல்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக ஈரான் பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்தது. இது ஈரானின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு துறையை குறிவைத்து ... மேலும் பார்க்க

சவூதி: பத்திரிகையாளருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்!

பயங்கரவாதம் மற்றும் அரசுக்கு துரோகம் இழைத்த குற்றத்துக்காக கடந்த 2018-இல் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளா் தூக்கிலிடப்பட்டதாக சவூதி அரேபிய அரசு தெரிவித்தது. பத்திரிகையாளா் துா்கி அல்-ஜசீருக்கு வழங்கப்ப... மேலும் பார்க்க

ஆஸ்திரேலிய போலீஸாா் கழுத்தை நெறித்து கைது செய்த இந்திய வம்சாவளி நபா் பலி!

ஆஸ்திரேலியாவில் காவல்துறை அதிகாரியால் கைது முயற்சியின்போது கழுத்து நெறிக்கப்பட்ட 42 வயது இந்திய வம்சாவளி நபா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். தெற்கு ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் உள... மேலும் பார்க்க