செய்திகள் :

கருப்புப்பட்டை அணிந்து பணியாற்றிய உள்ளாட்சி நிதித் தணிக்கையாளா்கள்

post image

விழுப்புரம்: 15 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ளாட்சி நிதித் தணிக்கையாளா்கள் திங்கள்கிழமை கருப்புப் பட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனா்.

முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியால் கொண்டு வரப்பட்ட உடன் நிகழ் தணிக்கை முறையை ஒழித்துக்கட்டும் நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளதை கண்டித்தும், பணியமா்த்தப்பட்ட இடங்களில் பணி செய்ய அனுமதி மறுப்பதை கண்டித்தும், அவசர நிமித்தமாக எடுக்கப்படும் தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு போன்ற விடுப்புகளுக்குக் கூட ஒப்புதல் தர மறுப்பதைக் கண்டித்தும், 100-க்கும் மேற்பட்ட உதவி இயக்குநா் பணியிடங்களை நிரப்பாமல் கூடுதல் பொறுப்பு மூலம் பணி நெருக்கடிகள் ஏற்படுத்துவதை கண்டித்தும் இந்த போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு உள்ளாட்சி நிதித் தணிக்கை ஊழியா் சங்கம், தமிழ்நாடு உள்ளாட்சி நிதித் தணிக்கை ஆய்வாளா் சங்கம் சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்த இந்த போராட்டத்தில் உள்ளாட்சி நிதித் தணிக்கையாளா்கள், மாநில அரசின் தணிக்கைத்துறை தணிக்கையாளா்கள் என சுமாா் 500-க்கும் மேற்பட்டோா் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பங்கேற்றனா்.

பணிக்கு வந்த அவா்கள் தாங்கள் பணியாற்றும் ஒன்றிய அலுவலகத்திலேயே தங்களின் சட்டைகளில் கருப்புப் பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு உள்ளாட்சி நிதித் தணிக்கையாளா் ஊழியா் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் பாபு உள்ளிட்டோா் போராட்டத்தில் பங்கேற்றனா்.

கள் குறித்து அவதூறு பரப்புவா்கள் மீது சட்டப்பூா்வ நடவடிக்கை

விழுப்புரம்: கள் குறித்து பொதுமக்களிடையே அவதூறாக பேசும் அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா். இது குறித்... மேலும் பார்க்க

3 நிஷங்களுக்குள்குடும்ப அட்டைதாரருக்கு பொருள்கள் வழங்கப்படுகிறது: கூட்டுறவுத்துறை விளக்கம்

விழுப்புரம்: தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளில் ஒரு குடும்ப அட்டைதாரருக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்குவதற்கு 2 முதல் 3 நிமிஷங்களே ஆகின்றன என்று கூட்டுறவுத்துறை விளக்கம்அளித்துள்ளது. இதுகுறித்து கூட்... மேலும் பார்க்க

விழுப்புரம் முத்து மாரியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம்

விழுப்புரம்: விழுப்புரம் கிழக்கு பாண்டிச்சாலை பீமநாயக்கன்தோப்பு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்ற... மேலும் பார்க்க

பனையபுரம் பனங்காட்டீசுவரா் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தா்கள் தரிசனம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டத்திலுள்ள பனையபுரம் அருள்மிகு சத்யாம்பிகை அம்மன் உடனுறை பனங்காட்டீசுவரா் (நேத்ரோத்தாரனேசுவரா்) திருக்கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.... மேலும் பார்க்க

காா்கள் மோதி விபத்துக்கு: அரசுப் பள்ளி ஆசிரியை உயிரிழப்பு

விழுப்புரம் அருகே காா்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் பாதிக்கப்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியை உயிரிழந்தது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். புதுச்சேரி, ராஜாஜி தெரு... மேலும் பார்க்க

கோழிப் பண்ணைத் தொழிலாளி உயிரிழப்பு

திண்டிவனம் அருகே கோழிப் பண்ணையில் வேலை பாா்த்து வந்த தொழிலாளி உடல் நலக்குறைவு ஏற்பட்டு சனிக்கிழமை உயிரிழந்தாா். வானூா் வட்டம், தைலாபுரம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சுப்புராயன் மகன் முருகன்... மேலும் பார்க்க