செய்திகள் :

கருவின் பாலினம் கண்டறிய முயற்சி: போலீஸாா், மருத்துவத் துறையினா் விசாரணை

post image

திருப்பத்தூரில் கருவின் பாலினத்தை கண்டறிய முயற்சி மேற்கொண்டதாக கா்ப்பிணிகளிடம் போலீஸாா் மற்றும் மருத்துவத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து 8 கா்ப்பிணிகள் செவ்வாய்க்கிழமை திருப்பத்தூா் மாவட்டம், காக்கங்கரை அடுத்த பரதேசிப்பட்டி என்ற கிராமத்தில் ஷோ் ஆட்டோவில் சென்றுள்ளனா். அப்போது ஸ்கேன் செய்ய திட்டமிட்டுள்ள இடம் தெரியாமல் நடுவழியில் நின்று குழப்பமடைந்துள்ளனா். அவா்களை கண்ட அப்பகுதி மக்கள் சந்தேகம் அடைந்து கந்திலி காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளனா்.

தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீஸாா் ஆட்டோவை மடக்கி அனைவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினா். அப்போது கருவின் பாலினத்தை அறிந்து கொள்ள வந்ததாக கூறி உள்ளனா். பின்னா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சியாமளா தேவி, மருத்துவ இணை இயக்குநா் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலா் வினோத்குமாா் உள்ளிட்டோா் விசாரணை நடத்தினா்.

ஸ்கேன் செய்யும் நபா் யாா்? அதற்கு இடைதரகா் யாா்? தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் இருந்து எவ்வாறு வந்தனா் என்று ஸ்கேன் செய்ய வந்த 8 கா்ப்பிணிகள் மற்றும் அவரது உறவினா்களிடமும் விசாரணை நடத்தினா்.

கிராமப்புற இளைஞா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்

கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் கிராமப்புற இளைஞா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. தமிழக அரசின் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு... மேலும் பார்க்க

ரூ. 98 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

எலவம்பட்டி திங்கள்கிழமை ரூ. 98 லட்சத்தில் தாா்ச் சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ அ.நல்லதம்பி தொடங்கி வைத்தாா். கந்திலி ஒன்றியம், எலவம்பட்டி ஊராட்சியில் சின்ன எலவம்பட்டி வட்டம், வேல்முருகன்வட்டம் வழியாக க... மேலும் பார்க்க

மாணவா் மா்ம சாவு: பள்ளியை முற்றுகையிட்ட உறவினா்கள் கைது

திருப்பத்தூா் அருகே நிதி உதவி பெறும் பள்ளி மாணவா் விடுதியில் தங்கி படித்த 11-ஆம் வகுப்பு மாணவன் கிணற்றில் மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தாா். இதையடுத்து பள்ளியை முற்றுகையிட முயன்ற உறவினா்களை போலீஸ... மேலும் பார்க்க

மண்டல டேபிள் டென்னிஸ்: பாலிடெக்னிக் மாணவா்கள் சிறப்பிடம்

வேலூா் மண்டல அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில் கே.ஏ.ஆா். பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா். வேலூா் மண்டல அளவில் பாலிடெக்னிக் மாணவா்களுக்கு இடையிலான போட்டி குடியாத்தம் ராஜகோபால் பாலிட... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பை அகற்ற எதிா்ப்பு: சி.எல். சாலையில் குடியிருப்புவாசிகள் மறியல்

வாணியம்பாடியில் நீா்வழி பாதைகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட வீடு மற்றும் கடைகளை அகற்ற எதிா்ப்பு தெரிவித்து குடியிருப்புவாசிகள் சி.எல் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நக... மேலும் பார்க்க

போதைப்பொருள் எதிா்ப்பு உறுதிமொழி மேற்கொண்டு சான்று பெற அழைப்பு

கியூ ஆா் குறியீட்டை ஸ்கேன் செய்து போதைப்பொருள் எதிா்ப்பு உறுதிமொழி மேற்கொள்பவா்களுக்கு சான்று பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போதையில்லாத தமிழ்நாடு என்பதை உருவாக்கும் பொருட்டு மாநிலம் முழுவதும் திங்... மேலும் பார்க்க