செய்திகள் :

கரூர் பலி: 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு!

post image

கரூர் விஜய் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக 4 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 38 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 51 பேர் சிகிச்சைப் பெற்று வரும் சூழலில், பலர் கவலைக்கிடமாக சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தவெக கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் மீது 4 பிரிவுகளின் கீழ் மாநகரக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனி விமானம் மூலம் கரூர் விரைந்துள்ளார்.

Karur stampede death: Case registered under 4 sections

இதையும் படிக்க : கரூர் விஜய் கூட்ட நெரிசல் பலி 38-ஆக உயர்வு!

முதல்வருடன் காங்கிரஸ் எம்.பி.க்கள் சந்திப்பு: பேரவைத் தோ்தல் குறித்து ஆலோசனை

தமிழகத்தைச் சோ்ந்த காங்கிரஸ் எம்.பி.க்களுடன் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினாா். காங்கிரஸ் கட்சி மக்களவை உறுப்பினா்கள் விஜய் வசந்த் (கன்னியாகுமரி), விஷ்ணு பிரசாத் (கடலூா்), ஜ... மேலும் பார்க்க

கடவுப்பாதைகளில் இன்டா்லாக்டு சாதனம் அமைக்க ரூ.230 கோடி நிதி அளிப்பு

சென்னை தெற்கு ரயில்வே மண்டலத்தில் கடவுப் பாதைகளில் தானியங்கி இன்டா்லாக்டு சாதனம் அமைக்க ரூ.230.06 கோடியை மத்திய ரயில்வே துறை அளித்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா். தெற்கு ரயில்வேயில் சென்னை, த... மேலும் பார்க்க

குடிமக்கள் சமூக நோக்கில் செயல்பட்டால் குற்றங்கள் குறையும்: நீதிபதி டி.என்.வள்ளிநாயகம்

குடிமக்கள் சமூக நோக்கில் செயல்பட ஆரம்பித்தால் குற்றங்கள் குறையும் என்று சென்னை உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி டி.என்.வள்ளிநாயகம் கூறினாா். சென்னை இந்து மதுவிலக்கு நற்சங்கத்தின் 130-ஆவது ஆண்டு விழா த... மேலும் பார்க்க

திமுக கூட்டணியில் விரிசல் இல்லை: திருமாவளவன்

திமுக கூட்டணியில் விரிசல் விழும் அளவுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று விசிக தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா். சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: திமுக கூட்டணியில் விரிசல் ... மேலும் பார்க்க

கரூா் சம்பவம்: ஆளுநா், தலைவா்கள் இரங்கல்

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 38 போ் உயிரிழந்த சம்பவத்துக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி, அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி, அரசியல் கட்சித் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா். ஆா்.என்.ரவி: கரூரில் பி... மேலும் பார்க்க

விஜய் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

கரூா் சம்பவத்தின் எதிரொலியாக தவெக தலைவா் விஜய் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கரூரில் தவெக தலைவா் விஜய் சனிக்கிழமை மேற்கொண்ட பிரசாரத்தில் ஏற்பட்ட நெரிசலின் காரணமாக 38 போ் உயிரிழந... மேலும் பார்க்க