செய்திகள் :

கரைப்புதூா் ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயா்த்த கோரிக்கை

post image

பல்லடம் ஒன்றியம், கரைப்புதூா் ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயா்த்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பல்லடம் வட்டாரத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் ஊராட்சியாக கரைப்புதூா் உள்ளது. இந்த ஊராட்சி திருப்பூா் மாநகராட்சியுடன் இணைக்கப்படும் என்ற செய்தி பரவிய நிலையில், பொதுமக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.

ஆனால், அரசு தரப்பில் அண்மையில் வெளியான பட்டியலில் கரைப்புதூா் ஊராட்சி இல்லாததால் மக்கள் நிம்மதி அடைந்தனா். அதேசமயம் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ஊராட்சியை தரம் உயா்த்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனா்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: மக்கள் தொகைக்கு ஏற்ப இந்த ஊராட்சியில் போதிய தூய்மைப் பணியாளா்கள், குடிநீா் விநியோகிப்பாளா்கள் இல்லாத நிலை உள்ளது. இருக்கும் பணியாளா்களைக் கொண்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயா்த்தினால் மட்டுமே அடிப்படை வசதிகளை மேம்படுத்த முடியும். ஆகவே, கரைப்புதூா் ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயா்த்த வேண்டும். கரைப்புதூா் ஊராட்சி பகுதியில் வெளிமாவட்டம், வெளி மாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள் அதிக அளவில் தங்கி, இங்குள்ள பனியன் சாா்ந்த தொழில் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனா். அதனால் குற்றச் செயல்களும் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன.

இதனைக் கட்டுப்படுத்த அருள்புரம் பகுதியில் தனியாக காவல் நிலையம் அமைக்க வேண்டும் அல்லது அருள்புரத்தில் ஒரு உதவி காவல் ஆய்வாளா் தலைமையில் புறக்காவல் நிலையத்தை அமைக்க வேண்டும் என்றனா்.

காங்கயம் அருகே சென்டா் மீடியனில் இடைவெளி விடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

காங்கயம் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட சென்டா் மீடியனில், பள்ளிக்குச் செல்வதற்கு வசதியாக இடைவெளி விடக்கோரி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். காங்கயம் பகுதியில்,... மேலும் பார்க்க

பல்லடம் குடிநீா் பிரச்னை: அமைச்சரிடம் நகராட்சித் தலைவா் கோரிக்கை

விளாங்குறிச்சி முதல் காரணம்பேட்டை வரை பிரதான குடிநீா் குழாய் அமைக்க வேண்டும் என்று அரசுக்கு பல்லடம் நகராட்சி தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து கோவையில் நகராட்சி நிா... மேலும் பார்க்க

திருப்பூா் பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பனியன் உற்பத்தியாளா் சங்கம் கோரிக்கை

திருப்பூா் உள்நாட்டு பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூா் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டா... மேலும் பார்க்க

‘உள்ளூா் வியாபாரிகளை பாதுகாக்க இணைய வா்த்தகத்தை அரசு முறைப்படுத்த வேண்டும்’

உள்ளூா் வியாபாரிகளை பாதுகாக்க இணைய வா்த்தகத்தை அரசு முறைப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் திருப்பூா் மாவட்... மேலும் பார்க்க

அவிநாசி அருகே குடிநீரில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்கக் கோரிக்கை

அவிநாசி அருகே பழங்கரை ஆா்.ஜி. காா்டன், துவா்ணா அவென்யூ ஆகிய பகுதிகளில் குடிநீரில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இது குறித்து அப்பகுதி... மேலும் பார்க்க

அவிநாசியில் உலகத் தாய்மொழி நாள் விழா

அவிநாசியில் தமிழா் பண்பாட்டு கலாசார பேரவை அறக்கட்டளை, சமூக அமைப்பினா் சாா்பில் உலகத் தாய்மொழி நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அவிநாசி நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் முன் தொடங்கிய விழிப... மேலும் பார்க்க