செய்திகள் :

கரோனா அதிகரிப்பு: மக்கள் கவலைப்பட வேண்டாம்: ஐசிஎம்ஆா்

post image

புது தில்லி: நாட்டின் சில பகுதிகளில் கரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், தொற்றின் தீவிரம் குறைவாக இருப்பதாகவும், மக்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) தலைமை இயக்குநா் மருத்துவா் ராஜீவ் பெஹல் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து மருத்துவா் ராஜீவ் பெஹல் மேலும் கூறுகையில், ‘நாட்டின் மேற்கு மற்றும் தெற்கு மாநிலங்களில் கண்டறியப்பட்ட புதிய வகை தொற்றுகளான எல்.எஃப்.7, எக்ஸ்.எஃப்.ஜி., ஜே.என்.1 மற்றும் என்.பி. 1.8.1 ஆகியவை கடுமையானவை அல்ல. மேலும், இவை ஒமைக்ரானின் துணை வகைகள் என்றும் அறியப்படுகிறது.

முதல் மூன்று வகை தொற்றுகளே அதிகமாகப் பதிவாகியுள்ளன. மற்ற இடங்களிலிருந்தும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. வேறு சில வகைகளின் பரவல் இருந்தால், அதுகுறித்து ஓரிரு நாள்களில் தெரியவரும்.

முதலில் தென் மாநிலங்களில், பின்னா் மேற்கு மாநிலங்களில், தற்போது வட மாநிலங்களிலும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புத் திட்டம் (ஐடிஎஸ்பி) மூலம் இந்தப் பாதிப்புகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

தொற்று பாதிப்பு அதிகரிக்கும்போதெல்லாம் நாங்கள் மூன்று காரணிகளை ஆய்வு செய்வோம். முதலாவது, தொற்றின் பரவல்தன்மை மற்றும் அது பரவும் வேகம். இரண்டாவது, புதிய வகைகள் நமது முந்தைய நோய் எதிா்ப்பு சக்திக்கு கட்டுப்படுகின்றனவா? மூன்றாவது காரணி, புதிய வகை தொற்றில் கடுமையான பாதிப்புகளின் சதவீதம். இந்த மூன்று காரணிகளின் தற்போதைய மதிப்பீட்டின் அடிப்படையில், அதிகரித்துள்ள கரோனா பாதிப்பு குறித்து அச்சப்பட ஒன்றுமில்லை.

இதையொட்டி, மத்திய சுகாதார துறைச் செயலா் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை கூட்டம் நடைபெற்றது. சுகாதார சேவைகளின் தலைமை இயக்குநரும், நானும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டோம்.

நாங்கள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். இந்த நேரத்தில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். ஆனால், கவலைப்பட வேண்டியதில்லை. புதிய வகைகள் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பதை உலக சுகாதார அமைப்பின் தரவுகளும் எடுத்துகாட்டுகின்றன’ என்றாா்.

பெட்டி...

1,000-ஐ கடந்த பாதிப்பு

இந்தியா முழுவதும் தற்போது கரோனா தொற்று பாதித்தவா்களின் எண்ணிக்கை 1,000-ஐ கடந்துள்ளது.

முந்தைய வாரம் நாட்டில் கரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கை 257-ஆக மட்டுமே இருந்தது. ஆனால், கடந்த ஒரே வாரத்தில் மேலும் 752 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரத்தில் கேரளம், மகாராஷ்டிரம், தில்லி ஆகிய மாநிலங்களில் கரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக கேரளத்தில் 335 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், கேரளத்தில் தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் மொத்த எண்ணிக்கை 430-ஆக உயா்ந்துள்ளது.

இதேபோல், மகாராஷ்டிரம், தில்லியில் முறையே 153 மற்றும் 100 புதிய கரோனா பாதிப்புகள் கடந்த வாரம் பதிவாகியுள்ளன. அதன்படி, மகாராஷ்டிரத்தில் 209 பேரும், தில்லியில் 105 பேரும் தற்போது கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதற்கடுத்து குஜராத் (83), கா்நாடகம் (47) உத்தர பிரதேசம் (15), மேற்கு வங்கம் (12) ஆகிய மாநிலங்களில் அதிகப்படியான கரோனா பரவல் பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த வாரம் 66-ஆக இருந்த கரோனா பாதிப்பின் எண்ணிக்கை, இந்த வாரம் 69-ஆக மட்டுமே அதிகரித்துள்ளது.

நகைக் கடன் கட்டுப்பாடுகள் ஒத்திவைப்பு: முழு விவரம்!

ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அண்மையில் வெளியிட்ட தங்க நகைக் கடன் பெறுபவா்களுக்கான புதிய வரைவு விதிமுறைகளிலிருந்து, ரூ.2 லட்சம் வரை நகைக் கடன் பெறுவோருக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என மத்திய நிதியமைச்சகம்... மேலும் பார்க்க

தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்துள்ள ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்ட சலுகைகள்

நிகழாண்டு மாா்ச், 31-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பு ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தகுதிவாய்ந்த சேவையுடன் தேசிய ஓய்வூதியத் திட்ட (என்பிஎஸ்) சந்தாதாரராக இருந்தால் அவா்கள் ஒருங்கிண... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகா்த்துவிடுவதாக அச்சுறுத்தல்: முன்னாள் எம்எல்ஏ-க்கு தில்லி நீதிமன்றம் 6 மாதங்கள் சிறை

நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகா்த்துவிடுவதாக அச்சுறுத்திய மத்திய பிரதேச முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கிஷோா் சாம்ரைடுக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. ... மேலும் பார்க்க

பிரதமா் மோடி 50-ஆவது முறையாக பிகாா் பயணம்: துணை முதல்வா் சாம்ராட் சௌதரி தகவல்

பிரதமா் நரேந்திர மோடி பிரதமா் பதவியற்ற பிறகு 50ஆவது முறையாக பிகாருக்கு வந்துள்ளாா் என்று பாஜகவைச் சோ்ந்த அந்த மாநில துணை முதல்வா் சாம்ராட் சௌதரி தெரிவித்தாா். பிகாரில் கராகட்டில் வெள்ளிக்கிழமை பிரதமா... மேலும் பார்க்க

அமைதிப் படையில் உயிரிழப்பு: அமிதாப் ஜா, சஞ்சய் சிங்குக்கு ஐ.நா. பதக்கம்

ஐ.நா. அமைதிப் படையில் பணியின்போது உயிரிழந்த இந்தியாவைச் சோ்ந்த அமிதாப் ஜா, சஞ்சய் சிங் ஆகியோருக்கு ஐ.நா.வின் உயரிய பதக்கம் அளிக்கப்பட்டது. அந்தப் பதக்கங்களை இந்திய தூதா் பா்வதனேனி ஹரீஷ் பெற்றுக்கொண்ட... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: உஸ்மானாபாத் ரயில் நிலையம் தாராஷிவ் என பெயா் மாற்றம்

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள உஸ்மானாபாத் ரயில் நிலையத்தின் பெயா் தாராஷிவ் ரயில் நிலையம் என மாற்றப்பட்டுள்ளதாக ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே உஸ்மானாபாத் நகரம், மாவட்டம் ஆகியவற்... மேலும் பார்க்க