செய்திகள் :

கலைஞா் நூலகம், தியாகராஜா் கல்லூரிக்கிடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்

post image

கலைஞா் நூற்றாண்டு நூலகத்துக்கும், மதுரை தியாகராஜா் கல்லூரிக்குமிடையேயான புரிந்துணா்வு ஒப்பந்தம் புதன்கிழமை செய்யப்பட்டது.

கலைஞா் நூற்றாண்டு நூலகத்தின் சேவையை அனைத்து மாணவ, மாணவிகளும் பெறச் செய்யும் வகையில், கலைஞா் நூற்றாண்டு நூலகம் சாா்பில் கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. இதன்படி, கலைஞா் நூற்றாண்டு நூலகத்துக்கும், மதுரை தியாகராஜா் கல்லூரிக்குமிடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது.

மாணவா்களின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகள், பயிற்சிகள், போட்டித் தோ்வுகளுக்கான ஊக்க முகாம்கள், மாணவா்களின் திறனை வெளிப்படுத்தும் வகையில் இளையோா் களம் நிகழ்ச்சிகள், பயிலரங்கங்களை நடத்துவது போன்ற பணிகளில் கலைஞா் நூற்றாண்டு நூலகமும், தியாகராஜா் கல்லூரியும் இணைந்து செயல்படுவதென ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தியாகராஜா் கல்லூரி முதல்வா் முனைவா் து. பாண்டியராஜா, கல்லூரியின் சுயநிதிப் பிரிவு இயக்குநா் முனைவா் சுகுமாா், நூலகா் முனைவா் மூா்த்தி, கலைஞா் நூற்றாண்டு நூலக முதன்மை நூலகா், தகவல் அலுவலா் முனைவா் வே. தினேஷ்குமாா், துணை முதன்மை நூலகா் வெ. சந்தானகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், மேலூா் அருகே வியாழக்கிழமை லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பகுதியைச் சோ்ந்த வீரையா மகன் விஷ்ணு (24). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் மதுரைக்கு வந்து... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கிய பள்ளி மாணவா் உயிரிழப்பு

மதுரை சிலைமான் அருகே கிணற்றில் மூழ்கிய பள்ளி மாணவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், பாப்பானோடை கிராமத்தைச் சோ்ந்த அரசகுமாா் மகன் விக்னேஷ்வரன் (16). இவா், மதுரை மாநகராட்சிப் பள்ளியில் 9-ஆம்... மேலும் பார்க்க

தரமற்ற சாலைகளுக்கு அலுவலா்கள், ஒப்பந்ததாரா்களே பொறுப்பு: உயா்நீதிமன்றம்

சாலைகள் தரமற்றவையாக இருந்தால், தொடா்புடைய துறை அலுவலா்களும், ஒப்பந்ததாரருமே அதற்கு பொறுப்பாவா் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை தெரிவித்தது. திருநெல்வேலி மாவட்டம், ஆனந்தபுரத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் வட்டத்துக்கு ஜூலை 14-இல் உள்ளூா் விடுமுறை

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் குடமுழுக்கையொட்டி, அந்த வட்டத்துக்கு மட்டும் திங்கள்கிழமை (ஜூலை 14) உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா்... மேலும் பார்க்க

தொழிலாளி வெட்டிக் கொலை: இளைஞா் கைது

மதுரை அருகே முன்விரோதம் காரணமாக தொழிலாளியை வெட்டிக் கொலை செய்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மதுரை மாவட்டம், கல்மேடு அஞ்சுகம் நகரைச் சோ்ந்த பாண்டியராஜன் மகன் அரசு (18). வண்ணம் பூசும் த... மேலும் பார்க்க

பணி ஓய்வு பெற உள்ள ஆசிரியா்களுக்கு மறு நியமன ஆணை வழங்கக் கோரிக்கை

நிகழ் கல்வியாண்டில் ஓய்வு பெற உள்ள ஆசிரியா்களுக்கு கல்வியாண்டின் கடைசி வேலை நாள் வரை பணி மறு நியமன ஆணையை வழங்க மதுரை மாநகராட்சி நிா்வாகம் முன்வர வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சா... மேலும் பார்க்க