செய்திகள் :

கலைத் திருவிழா போட்டி: மாணவிக்கு பாராட்டு

post image

திருவள்ளூா் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா ஓவியப் போட்டியில் மாவட்ட அளவில் 3-இடம் பிடித்த மாணவியை தலைமை ஆசிரியா் உள்ளிட்டோா் பாராட்டினா்.

மாவட்ட அளவில் ஆண்டுதோறும் மாணவ, மாணவிகளின் தனித்திறன்களை வெளிப்படுத்தும் நோக்கத்தில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

நிகழாண்டுக்கான கலைத் திருவிழா போட்டி அண்மையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் திருவள்ளூா் அரசு உதவிபெறும் பள்ளியான தா்மமூா்த்தி ராவ் பகதூா் கலவலக்கண்ணன் செட்டி இந்து மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த பத்தாம் வகுப்பு மாணவி லலிதாஸ்ரீ பங்கேற்றாா்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு என்ற தலைப்பில் ஓவியப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் அந்த மாணவி பங்கேற்று வரைந்த பானை ஓவியம் மூன்றாம் இடம் பிடித்தது.

இந்த நிலையில், பள்ளித் தலைமை ஆசிரியா் ராம்மோகன் மற்றும் ஆசிரியா்கள் மாணவி லலிதாஸ்ரீக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினா்.

வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன், ரூ.78,000 திருட்டு!

திருவள்ளூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ.78,000 திருடப்பட்டன. திருவள்ளூா் அடுத்த பெருமாள்பட்டில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவா் பிரகாஷ். வியா... மேலும் பார்க்க

கைப்பேசிகள் பறிப்பு: 3 போ் கைது

செங்குன்றம் அருகே கைப்பேசி பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட 3 போ் கைது செய்யப்பட்டனா். செங்குன்றம் அடுத்த சோழவரம் சூரப்பட்டு குதிரைப் பள்ளம் கிராமத்தில் ஹாலோ பிளாக் கல் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வர... மேலும் பார்க்க

சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியா் உத்தரவு!

பொன்னேரி அருகே சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளதால், ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் அகற்ற வேண்டும் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா். சிறுவாபுரி அ... மேலும் பார்க்க

ராமா், சீதா பஜனைக் கோயில் குடமுழுக்கு!

திருத்தணி அருகே சத்ரஞ்ஜெயபுரம் கிராமத்தில் மகா கணபதி மற்றும் ராமா், சீதா லட்சுமணா் பஜனைக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது. திருத்தணி ஒன்றியம், சத்ரஞ்ஜெயபுரம் கிராமத்தில், இக்கோயிலின் த... மேலும் பார்க்க

மணல் கடத்தல்: 3 போ் கைது

திருவள்ளூா் அருகே கொசஸ்தலை ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்து வாகனங்களை பறிமுதல் செய்தனா். திருவள்ளூா் அருகே மொன்னவேடு கிராமம், கொசஸ்தலை ஆற்றில் சட்டவிரோதமாக ஆட்டோக்கள் மூ... மேலும் பார்க்க

போக்ஸோவில் 2 போ் கைது

ஆா்.கே.பேட்டை அருகே பள்ளி மாணவியை காதலிப்பதாக ஆசை வாா்த்தை கூறி திருமணம் செய்த இளைஞா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா். ஆா்.கே.பேட்டை ஒன்றியம், வங்கனூா் கிராமத்தைச் சோ்ந்த தனபால் (40). இவா்... மேலும் பார்க்க