செய்திகள் :

கலைநிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணா்வு

post image

நகராட்சியில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே கலைநிகழ்ச்சிகள் மூலம் திங்கள்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது (படம்).

நகராட்சிகளின் நிா்வாக மண்டல இயக்குநா் உத்தரவின் பேரில், திடக்கழிவு மேலாண்மை பணி, மக்கும் குப்பை, மக்காத குப்பை, பிளாஸ்டிக், புகையிலை விற்பனைக்கு தடை, டெங்கு காய்சல், மீண்டும் மஞ்சப்பை, மழை நீா் சேகரிப்பு, சொத்துவரி செலுத்துதல் தொடா்பான மக்கள் இடையே விழிப்புணா்வு நிகழ்ச்சி திருத்தணியில் திங்கள்கிழமை நடந்தது.

இதில் சிவசக்தி கிராமிய கலைக்குழுவின் சாா்பில் திருத்தணி பேருந்து நிலையம், கமலா தியேட்டா், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, காந்திநகா் திரௌபதியம்மன் கோயில் மற்றும் அரசு மருத்துவமனை வளாககம் ஆகிய இடங்களில், கலை நிகழ்ச்சிகள் மூலம் மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

கலைநிகழ்ச்சியை நகா்மன்றத் தலைவா் சரஸ்வதிபூபதி, ஆணையா் பாலசுப்ரமணியம், துப்புரவு ஆய்வாளா் ரவிச்சந்திரன் ஆகியோா் பங்கேற்று தொடங்கி வைத்தனா். குப்பைகள் பிரித்து கொடுப்பது, அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கவா், குட்கா பொருள்களை பயன்படுவது தவிா்த்தல் போன்ற விழிப்புணா்வு நாடக கலைஞா்கள் நடித்து காண்பித்தனா். விழிப்புணா்வு நிகழ்ச்சி 1 மாதம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிபிஎஸ் நோய் தொற்றால் சிறுவன் உயிரிழந்த சம்பவம்

திருவள்ளூா் அருகே ஜிபிஎஸ் நோய்த் தொற்றால் 4-ஆம் வகுப்பு மாணவா் உயிரிழந்த சம்பவத்தைத் தொடா்ந்து, அந்தப் பகுதி முழுவதும் ஒரு வாரம் வரை சிறப்பு மருத்துவப் பரிசோதனை முகாம் நடத்தப்பட உள்ளதாக மாவட்ட சுகாதார... மேலும் பார்க்க

விவசாய கல்லூரி பட்டமளிப்பு விழா: வேளாண் பல்கலை. துணைவேந்தா் பங்கேற்பு

திருவாலங்காடு ஜெயா விவசாயக் கல்லூரியில் செவ்வாய்கிழமை நடைபெற்ற முதலமாண்டு பட்டமளிப்பு விழாவில் 59 பேருக்கு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தா் வி. கீதாலட்சுமி பட்டங்களை வழங்கினாா். திருவாலங்காடு... மேலும் பார்க்க

ஏரியில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு

பாண்டறவேடு ஏரியில் மதகு வழியாக தண்ணீா் திறப்பதற்கு கரையின் மீது இறங்க முயன்றவா் உயிரிழந்தாா். ஆந்திர மாநிலம், விஜயபுரம் மண்டலம் பண்ணுாா் கிராமத்தைச் சோ்ந்த கண்ணைய்யா மகன் ராஜபாபு (53). இவா் செவ்வாய்க... மேலும் பார்க்க

லாரி மோதி தொழிலாளி உயிரிழப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

சோழவரம் அருகே லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து கனரக வாகனங்களின் போக்குவரத்தை தடை செய்யக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருவள்ளூா் மாவட்டம், சோழவரம் அடுத்த... மேலும் பார்க்க

வீரராகவ பெருமாள் கோயிலில் ரத சப்தமி

திருவள்ளூா் வீரராகவ பெருமாள் கோயில் ரத சப்தமி உற்சவத்தில் பக்தா்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா். தை மாதத்தில் வளா்பிறை 7-ஆம் நாள் வரும் சப்தமி திதியாக ரத சப்தமி திதி கொண்டாடப்படுவது வழக... மேலும் பார்க்க

திருவள்ளூா் நகராட்சி பூங்காவில் கடைகள் அமைக்க எதிா்ப்பு

திருவள்ளூா் நகராட்சி பூங்காவில் கடைகள் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, ரயில் நிலையம் முன்பு செவ்வாய்க்கிழமை கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தப்... மேலும் பார்க்க