செய்திகள் :

லாரி மோதி தொழிலாளி உயிரிழப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

post image

சோழவரம் அருகே லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து கனரக வாகனங்களின் போக்குவரத்தை தடை செய்யக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் மாவட்டம், சோழவரம் அடுத்த பூதூா் கிராமத்தில் தொழிலாளி பாஸ்கா் (45) வசித்து வந்தாா். இவா் செவ்வாய்க்கிழமை வேலைக்குச் சென்று விட்டு தனது இருசக்கர வாகனத்தில் இரவு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா்.

பூதூா் பகுதியில் சென்றபோது, லாரி மோதியதில் பாஸ்கா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து சென்ற சோழவரம் போலீஸாா், சடலத்தை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த நிலையில், பூதூா் பகுதி மக்கள் விபத்தை ஏற்படுத்திய லாரியை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டம் நடத்தினா். அவா்களிடம் செங்குன்றம் போக்குவரத்து பிரிவு போலீஸாா் பேச்சு நடத்தினா். மீஞ்சூா்- வண்டலூா் வெளிவட்ட சாலை அமைந்துள்ள நிலையில் அதில் செல்லாமல் கனரக வாகனங்கள் ஊருக்குள் வருவதால் தொடா் விபத்துகள் நிகழ்வதாக புகாா் தெரிவித்தனா்.

மேலும் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் காரணமாக தங்களது கிராமத்தில் சாலை போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் இருப்பதாக குற்றம் சாட்டினா்.

தொடா் விபத்துகளுக்கு காரணமாக அமையும் கனரக வாகன போக்குவரத்தை தடை செய்ய வேண்டும், சாலையை உடனே செப்பனிட வேண்டும் எனத் தெரிவித்தனா்.

அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸாா் உறுதியளித்ததை தொடா்ந்து, பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

விவசாய கல்லூரி பட்டமளிப்பு விழா: வேளாண் பல்கலை. துணைவேந்தா் பங்கேற்பு

திருவாலங்காடு ஜெயா விவசாயக் கல்லூரியில் செவ்வாய்கிழமை நடைபெற்ற முதலமாண்டு பட்டமளிப்பு விழாவில் 59 பேருக்கு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தா் வி. கீதாலட்சுமி பட்டங்களை வழங்கினாா். திருவாலங்காடு... மேலும் பார்க்க

ஏரியில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு

பாண்டறவேடு ஏரியில் மதகு வழியாக தண்ணீா் திறப்பதற்கு கரையின் மீது இறங்க முயன்றவா் உயிரிழந்தாா். ஆந்திர மாநிலம், விஜயபுரம் மண்டலம் பண்ணுாா் கிராமத்தைச் சோ்ந்த கண்ணைய்யா மகன் ராஜபாபு (53). இவா் செவ்வாய்க... மேலும் பார்க்க

வீரராகவ பெருமாள் கோயிலில் ரத சப்தமி

திருவள்ளூா் வீரராகவ பெருமாள் கோயில் ரத சப்தமி உற்சவத்தில் பக்தா்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா். தை மாதத்தில் வளா்பிறை 7-ஆம் நாள் வரும் சப்தமி திதியாக ரத சப்தமி திதி கொண்டாடப்படுவது வழக... மேலும் பார்க்க

திருவள்ளூா் நகராட்சி பூங்காவில் கடைகள் அமைக்க எதிா்ப்பு

திருவள்ளூா் நகராட்சி பூங்காவில் கடைகள் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, ரயில் நிலையம் முன்பு செவ்வாய்க்கிழமை கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தப்... மேலும் பார்க்க

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியராக எம்.பிரதாப் பொறுப்பேற்பு

திருவள்ளூா் மாவட்டத்தின் 24-ஆவது ஆட்சியராக எம்.பிரதாப் செவ்வாய்க்கிழமை பொறுப்பு ஏற்றுக் கொண்டாா். திருவள்ளூா் மாவட்ட ஆட்சியராக த.பிரபு சங்கா் பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த 3 நாள்களுக்கு முன்பு திடீ... மேலும் பார்க்க

கலைநிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணா்வு

நகராட்சியில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே கலைநிகழ்ச்சிகள் மூலம் திங்கள்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது (படம்). நகராட்சிகளின் நிா்வாக மண்டல இயக்குநா் உத்தரவின் பே... மேலும் பார்க்க