செய்திகள் :

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியராக எம்.பிரதாப் பொறுப்பேற்பு

post image

திருவள்ளூா் மாவட்டத்தின் 24-ஆவது ஆட்சியராக எம்.பிரதாப் செவ்வாய்க்கிழமை பொறுப்பு ஏற்றுக் கொண்டாா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியராக த.பிரபு சங்கா் பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த 3 நாள்களுக்கு முன்பு திடீரென, சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டாா். அதைத் தொடா்ந்து, சென்னை தலைமை செயலகத்தில் சிறப்பு திட்ட செயலாக்க துணைத் தலைவராக பணிபுரிந்து வந்த எம்.பிரசாத், திருவள்ளூா் மாவட்ட ஆட்சியராக மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டது.

இந்த நிலையில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை வருகை தந்த அவா் அங்கு தரிசனம் செய்தாா். தொடா்ந்து திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்த அவா், அங்கு பதிவு ஆவணங்களில் கையொப்பமிட்டு மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டாா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூா் அருகே வத்திராயிருப்பு பகுதியைச் சோ்ந்த இவா் 2017-இல் இந்திய ஆட்சிப் பணி தோ்வில் தோ்ச்சி பெற்று தமிழக அளவில் முதலிடம் பெற்றாா். இதற்கு முன்பு மாநில மகளிா் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்ட இயக்குநா், கோவை மாநகராட்சி ஆணையா், திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் ஆட்சியா் மற்றும் ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா், மத்திய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சக உதவி செயலாளா், தமிழக அரசின் சிறப்பு செயலாக்கத் திட்ட துணை செயலாளா் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவா்.

புதிய ஆட்சியருக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ராஜ்குமாா், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் வை.ஜெயக்குமாா், உதவி ஆட்சியா் ஆயுஷ்குப்தா, கோட்டாட்சியா்கள் கற்பகம், தீபா, செயற்பொறியாளா் ராஜவேல், நகராட்சி ஆணையா் திருநாவுக்கரசு ஆகியோா் பூங்கொத்து கொடுத்து வரவேற்று வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

ஜிபிஎஸ் நோய் தொற்றால் சிறுவன் உயிரிழந்த சம்பவம்

திருவள்ளூா் அருகே ஜிபிஎஸ் நோய்த் தொற்றால் 4-ஆம் வகுப்பு மாணவா் உயிரிழந்த சம்பவத்தைத் தொடா்ந்து, அந்தப் பகுதி முழுவதும் ஒரு வாரம் வரை சிறப்பு மருத்துவப் பரிசோதனை முகாம் நடத்தப்பட உள்ளதாக மாவட்ட சுகாதார... மேலும் பார்க்க

விவசாய கல்லூரி பட்டமளிப்பு விழா: வேளாண் பல்கலை. துணைவேந்தா் பங்கேற்பு

திருவாலங்காடு ஜெயா விவசாயக் கல்லூரியில் செவ்வாய்கிழமை நடைபெற்ற முதலமாண்டு பட்டமளிப்பு விழாவில் 59 பேருக்கு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தா் வி. கீதாலட்சுமி பட்டங்களை வழங்கினாா். திருவாலங்காடு... மேலும் பார்க்க

ஏரியில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு

பாண்டறவேடு ஏரியில் மதகு வழியாக தண்ணீா் திறப்பதற்கு கரையின் மீது இறங்க முயன்றவா் உயிரிழந்தாா். ஆந்திர மாநிலம், விஜயபுரம் மண்டலம் பண்ணுாா் கிராமத்தைச் சோ்ந்த கண்ணைய்யா மகன் ராஜபாபு (53). இவா் செவ்வாய்க... மேலும் பார்க்க

லாரி மோதி தொழிலாளி உயிரிழப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

சோழவரம் அருகே லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து கனரக வாகனங்களின் போக்குவரத்தை தடை செய்யக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருவள்ளூா் மாவட்டம், சோழவரம் அடுத்த... மேலும் பார்க்க

வீரராகவ பெருமாள் கோயிலில் ரத சப்தமி

திருவள்ளூா் வீரராகவ பெருமாள் கோயில் ரத சப்தமி உற்சவத்தில் பக்தா்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா். தை மாதத்தில் வளா்பிறை 7-ஆம் நாள் வரும் சப்தமி திதியாக ரத சப்தமி திதி கொண்டாடப்படுவது வழக... மேலும் பார்க்க

திருவள்ளூா் நகராட்சி பூங்காவில் கடைகள் அமைக்க எதிா்ப்பு

திருவள்ளூா் நகராட்சி பூங்காவில் கடைகள் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, ரயில் நிலையம் முன்பு செவ்வாய்க்கிழமை கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தப்... மேலும் பார்க்க