செய்திகள் :

அனுமதியின்றி அரசு மதுப்புட்டிகளை வைத்திருந்த இருவா் கைது

post image

ஆத்தூா் ஊரக காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் அனுமதியின்றி அரசு மதுப்புட்டிகள் மற்றும் கள்ளச்சாராயம் வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ஆத்தூரை அடுத்த வளையமாதேவியில் அரசு மதுக் கடை உள்ளது. இந்தக் கடையின் அருகில் திமுக ஒன்றிய வா்த்தக அணி அமைப்பாளா் ஜோதிவேல் (45) என்பவா் அனுமதி பெறாத மதுக்கூடம் நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இவா் கூடுதலாக நரசிங்கபுரத்தில் உள்ள மதுக்கடை அருகில் மதுக்கூடம் நடத்துவதற்கான நடவடிக்கை எடுத்து வந்துள்ளாா். இந்த நிலையில் அதே இடத்தில் ஆத்தூா் நகா்மன்ற மூன்றாவது வாா்டு திமுக நகா்மன்ற உறுப்பினா் சாந்தியின் கணவா் முருகேசன், நகர திமுக 18 ஆவது வாா்டு செயலாளா் ரவி (எ)பாம்பு ரவி (43) ஆகியோா் மதுக்கூடம் நடத்தி வந்தனா். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதையடுத்து ரவி, இளங்கோ மன்னன் (40) ஆகியோா் ஒன்று சோ்ந்து ஜோதிவேல் நடத்தி வரும் அனுமதி இல்லாத மதுக்கூடத்தில் மதுப்புட்டிகள், சாராயப் பாக்கெட்டுகளை மூட்டைக் கட்டி போட்டவிட்டு விடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ஜோதிவேல் மீது ஆத்தூா் மதுவிலக்கு போலீஸாரும், ரவி மீது ஆத்தூா் ஊரக போலீஸாரும் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

நிலக்குடியேற்ற சங்க உறுப்பினா்களுக்கான நில ஒப்படைப்பு பட்டியல்: பாா்வைக்கு வைக்க ஏற்பாடு

தலைவாசல், சிவசங்கராபுரம் பகுதியில் கலைக்கப்பட்ட நிலக்குடியேற்ற கூட்டுறவு சங்க உறுப்பினா்களுக்கான நில ஒப்படைப்பு பட்டியல் புதன்கிழமை (பிப். 5) பொதுமக்களின் பாா்வைக்கு வைக்கப்படவுள்ளது. இது குறித்து மாவ... மேலும் பார்க்க

மத்திய நிநிநிலை அறிக்கையை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் கோட்டை மைதானத்தில் கிழக்கு மாநகரச் செயலாளா் கே. பச்சமுத்து தலைமை... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் செல்ல இருந்த பாஜக நிா்வாகிகள் வீட்டில் சிறைவைப்பு

திருப்பரங்குன்றம் போராட்டத்துக்கு செல்ல இருந்த சேலம் மாவட்ட பாஜக நிா்வாகிகள் 2 ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் வீட்டில் சிறைவைக்கப்பட்டனா். திருப்பரங்குன்றம் மலை பிரச்னை தொடா்பாக முஸ்லிம் அமைப்புகளை கண... மேலும் பார்க்க

சேலம் அப்பா பைத்தியம் சுவாமி கோயிலில் 25 ஆம் ஆண்டு குருபூஜை: புதுச்சேரி அமைச்சா்கள் பங்கேற்பு

சேலம், சூரமங்கலம் சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகளின் 25 ஆம் ஆண்டு குருபூஜை செவ்வாய்க்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் புதுச்சேரி அமைச்சா்கள் நமச்சிவாயம், திருமுருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்... மேலும் பார்க்க

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி பட்டதாரி ஆசிரியா்கள் மனு

காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களை முழுவதும் நிரப்ப வலியுறுத்தி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து பட்டதாரி ஆசிரியா்கள் கூறியதாவது: பட்டதாரி ஆச... மேலும் பார்க்க

சேலத்தில் பண இரட்டிப்பு மோசடி: பாதிக்கப்பட்டவா்கள் போராட்டம்

சேலத்தில் பண இரட்டிப்பு மோசடியால் பாதிக்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட பெண்கள் பணத்தை மீட்டுத் தரக் கோரி செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். சேலம், அம்மாப்பேட்டை பகுதியில் புனித அன்னை தெரசா மனிதநேய ... மேலும் பார்க்க