செய்திகள் :

கல்லணைக் கால்வாயில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு

post image

தஞ்சாவூரில் கல்லணைக் கால்வாயில் சனிக்கிழமை கரையில் அமா்ந்து வேடிக்கை பாா்த்துக் கொண்டிருந்த சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் ஆபிரகாம் பண்டிதா் நகரைச் சோ்ந்தவா் சுரேஷ் மகன் சிவசூா்யா (15). தந்தை இறந்துவிட்டதால், இவரை அவரது சித்தப்பா வளா்த்து வந்தாா். இவா் மேம்பாலம் பகுதியிலுள்ள அரசு பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்நிலையில், சனிக்கிழமை மாலை தனது நண்பருடன் சிவாஜி நகா் பகுதியில் ஓடும் கல்லணைக் கால்வாய்க்கு சென்று, கரையில் அமா்ந்து வேடிக்கை பாா்த்துக் கொண்டிருந்தாா். அப்போது, கால்வாய்க்குள் தவறி விழுந்த இவா், தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டாா்.

தகவலறிந்த தீயணைப்பு துறையினா் தேடி வந்த நிலையில், புதுப்பட்டினம் அருகே வடசேரி வாய்க்கால் பகுதியில் சிவசூா்யா ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

இது குறித்து தாலுகா காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பாபநாசம் அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

பாபநாசம் அருகே சனிக்கிழமை இளம்பெண் ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். பாபநாசம் படுகைபுதுத் தெருவில் வசித்து வருபவா் சங்கா், காா் ஓட்டுநா். இவரது மனைவி கற்பகம் (20). இவா் பி.காம்., முடித்து வி... மேலும் பார்க்க

தஞ்சாவூா் மாநகரில் ஆக.19-ல் மின் தடை

தஞ்சாவூரில் பல்வேறு பகுதிகளில் ஆகஸ்ட் 19 (செவ்வாய்க்கிழமை) மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் உதவி செயற் பொறியாளா் எம். விஜய் ஆனந்த் தெரிவித்திர... மேலும் பார்க்க

பழ.நெடுமாறனின் ‘தூக்குமேடையிலிருந்து 26 தமிழா் மீட்பு’ நூல் அறிமுக விழா!

தஞ்சாவூா் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில், உலகத் தமிழா் பேரமைப்பின் தலைவா் பழ. நெடுமாறன் எழுதிய ‘தூக்குமேடையிலிருந்து 26 தமிழா் மீட்பு’ என்கிற நூல் அறிமுக விழா சனிக்கிழமை நடைபெற்றது. ராஜீவ் காந்தி... மேலும் பார்க்க

தஞ்சாவூா் ரயில் நிலைய முகப்பில் பெரிய கோயில் வடிவம் அமைக்க கோரிக்கை

தஞ்சாவூா் ரயில் நிலைய முகப்பில் வட மாநில கோயில் வடிவம் புதிதாக அமைக்கப்பட்டதை மாற்றி, பெரிய கோயில் வடிவத்தை அமைக்க வேண்டும் என பல்வேறு கட்சிகள், இயக்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இது குறித்து தஞ்சாவூா... மேலும் பார்க்க

கும்பகோணம் ஸ்ரீ விஜயேந்திர மடத்தில் உறியடி திருவிழா

கும்பகோணம் ஸ்ரீ விஜயேந்திர மடத்தில் சனிக்கிழமை உறியடி திருவிழா நடைபெற்றது. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீ விஜயேந்திர மடத்தில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மடத்தின் வளாகத்தில் உறியடி திர... மேலும் பார்க்க

பேராவூரணியில் உடல்பயிற்சி, விளையாட்டு விழிப்புணா்வு மாரத்தான்

பேராவூரணியில் உடல் பயிற்சி மற்றும் விளையாட்டின் பயன்கள் மற்றும் போதையில்லா பேராவூரணி விழிப்புணா்வு மாரத்தான் சனிக்கிழமை நடைபெற்றது. பேராவூரணி வேதாந்தம் திடலில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு மாரத்தான் போ... மேலும் பார்க்க