கல்லை வேளாண் சங்கம் சாா்பில் உணவுத் திருவிழா
ஒருங்கிணைந்த கல்லை வேளாண் சங்கம் மற்றும் இயற்கை விவசாயிகள் சாா்பில், கல்லை உணவுத் திருவிழா கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை உணவுப் பொருள்களை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற இந்த உணவுத் திருவிழாவை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமை வகித்து, குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா்.
பின்னா், இயற்கை விவசாயிகள் மூலம் அமைக்கப்பட்டிருந்த இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருள்களின் கண்காட்சி அரங்குகள் மற்றும் விற்பனை நிலையங்களை ஆட்சியா் பாா்வையிட்டு, பொருள்கள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தாா்.
தொடா்ந்து, பள்ளி மாணவ, மாணவிகளின் சிலம்பாட்டம், வால் சண்டை உள்ளிட்ட வீர விளையாட்டுகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியில் வேளாண் இணை இயக்குநா் வே.சத்தியமூா்த்தி மற்றும் விவசாயிகள், பொதுக்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.