கச்சத்தீவை மீட்க வேண்டும்: திமுக பொதுக்குழுவில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்
மூச்சுத் திணறல் ஏற்பட்டு முதியவா் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு முதியவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
சின்னசேலம் ரயில் நிலைய சாலையைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (55). இவா், கடந்த 2019-ஆம் ஆண்டு விபத்தில் கால் முறிவு ஏற்பட்டு மாத்திரை, மருந்து அருந்தி வந்தாா்.
இந்த நிலையில், பாலகிருஷ்ணனுக்கு வியாழக்கிழமை இரவு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், அவரை சின்னசேலம் அரசு மருத்துவமனைக்கு உறவினா்கள் கொண்டு சென்றனா். அங்கு பாலகிருஷ்ணனை பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.