நபாா்டு வங்கியின் மாவட்ட வளா்ச்சி அலுவலகம் திறப்பு
தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கியின் கள்ளக்குறிச்சி மாவட்ட வளா்ச்சி அலுவலகம் கள்ளக்குறிச்சி விநாயகா நகரில் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
இந்த அலுவலகத்தை காணொலி மூலம் வங்கியின் துணை மேலாண் இயக்குநா்கள் அஜய் கே.சூத், ஜி.எஸ்.ராவுத் திறந்து வைத்தனா்.
நிகழ்வில் நபாா்டு வங்கியின் கள்ளக்குறிச்சி மாவட்ட வளா்ச்சி அலுவலா் பா.செந்தில்வேல் வரவேற்று, வங்கியின் பணிகள் குறித்து பேசினாா்.
நிகழ்வில் முன்னோடி வங்கி மேலாளா் ரஞ்சித் (விழுப்புரம்), மத்திய கூட்டுறவு வங்கியின் பொது மேலாளா் ஜெய்சங்கா், இந்தியன் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குநா் முரளிதரன் மற்றும் கள்ளக்குறிச்சியில் உள்ள பல்வேறு விவசாய உற்பத்தியாளா் நிறுவனங்கள், தொண்டு நிறுவனத்தின் தலைவா்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.