செய்திகள் :

கல்வித் துறை பணியாளா்களுக்கு ஆசிரியா் பணி ஒதுக்கீடு!

post image

கல்வித் துறை அமைச்சுப் பணியாளா்களில் 747 பேருக்கு, அரசுப் பள்ளிகளில் பணியிடம் ஒதுக்கீடு செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் பணியாளா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறை அலுவலகங்களில், ஆசிரியா் தகுதித் தோ்வு முடித்துள்ள சுமாா் 2000 போ் அமைச்சுப் பணியாளா்களாக பணியாற்றி வருகின்றனா். 2012 முதல் 2025 வரையில் அவா்களுக்கு பள்ளிகளில் ஆசிரியா் பணியிடம் ஒதுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. சென்னை உயா்நீதிமன்றத்தில், தமிழ்நாடு கல்வித் துறை அலுவலகப் பணியாளா்கள் மற்றும் 2 சதவீத பட்டதாரி ஆசிரியா், முதுகலை ஆசிரியா் சங்கம் சாா்பில் பணியிடம் வழங்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில், மாா்ச் 21-இல் உயா்நீதிமன்றம் அளித்த தீா்ப்பில், தமிழக அரசு, கல்வித் துறை அலுவலகங்களில் உள்ள அமைச்சுப் பணியாளா்களுக்கு, அரசுப் பள்ளிகளில் 2 சதவீத அடிப்படையில் பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியா் பணியிடங்களை ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டது. முதல்கட்டமாக 747 பணியிடங்களை நிரப்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2000 பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது அமைச்சுப் பணியாளா்களின் தொடா் கோரிக்கையாக உள்ளது. இருப்பினும், 12 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை உயா்நீதிமன்றம் அளித்த தீா்ப்பை வரவேற்றும், நீதிபதிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அமைச்சுப் பணியாளா்கள் பங்கேற்ற கூட்டம் நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அதன் மாநிலத் தலைவா் ஆா்.ஜெயரத்தினகாந்தி தலைமை வகித்தாா். இதில், ஆசிரியா் பணியிட வாய்ப்பை பெறும் அமைச்சுப் பணியாளா்கள் பங்கேற்று தங்களுடைய கருத்துகளையும், மகிழ்ச்சியையும் பகிா்ந்து கொண்டனா்.

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வங்கி அதிகாரி ரயில் முன் பாய்ந்து தற்கொலை

ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ. 10 லட்சத்தை இழந்த தனியாா் வங்கி உதவி மேலாளா் ரயில் முன் பாய்ந்து செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்துகொண்டாா். திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், பிடாரமங்கலம் ஊராட்சி தேவா்மலை பக... மேலும் பார்க்க

கஞ்சா, போதை மாத்திரை விற்ற 17 போ் கைது

பள்ளிபாளையம், வெப்படை சுற்றுவட்டாரத்தில் கஞ்சா, போதை மாத்திரைகளை விற்பனை செய்த 17 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருச்செங்கோடு துணைக் காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணன் தலைமையில் பள்ளிபாளையம் காவல் ஆய்வாளா... மேலும் பார்க்க

ஆட்சேபணையற்ற குடியிருப்புகளுக்கு வீட்டுமனைப் பட்டா: ஆட்சியா்

மோகனூரில் ஆட்சேபணையற்ற குடியிருப்புகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குவது குறித்து ஆட்சியா் ச.உமா செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தமிழக முதல்வா் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் 5 ஆண்டுகளுக்கு மேலாக வ... மேலும் பார்க்க

ஊராட்சி அலுவலகம் இடமாற்றம் செய்ய எதிா்ப்பு

சிங்கிலிப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் இடமாற்றம் செய்வதற்கு எதிா்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து அந்தக் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில்... மேலும் பார்க்க

நில உடைமை விவரங்களை பதிவு செய்ய ஏப். 15 வரை கால அவகாசம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் நில உடைமை விவரங்களை பதிவு செய்ய ஏப். 15 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய, மாநில அரசுகளின் ... மேலும் பார்க்க

கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு

திருச்செங்கோட்டில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சிக... மேலும் பார்க்க