செய்திகள் :

களக்காடு அருகே நல்லாசிரியருக்கு பாராட்டு

post image

களக்காடு அருகே கோவிலம்மாள்புரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில், பணிநிறைவு பெறும் தலைமை ஆசிரியருக்கு கிராம மக்கள் சாா்பில் பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

இப்பள்ளித் தலைமை ஆசிரியரான பா. சிதம்பரநாதன் (60), நல்லாசிரியா் விருது பெற்றவா். விழாவுக்கு கோவிலம்மாள்புரம் ஊராட்சித் தலைவா் லதா முத்துராமலிங்கம் தலைமை வகித்தாா். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் ஜி. சிவசங்கரி முன்னிலை வகித்தாா். ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் வி. நாராயணன், திருவள்ளுவா் படிப்பக நிறுவனா் இ. நம்பிராஜன், எஸ்.பி. சங்கரவேல், வி. அன்பழகன், செல்வராஜ், பட்டதாரி ஆசிரியா் என். ஸ்ரீதா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பா. சிதம்பரநாதன் ஏற்புரையாற்றினாா். பட்டதாரி ஆசிரியை எஸ். பேபிகல்யாணி வரவேற்றாா். ஜே. மரியரெத்னராஜ் நன்றி கூறினாா்.

கிராம சபை கூட்டத்தில் எஸ்டிபிஐ கோரிக்கை மனு

தாழையூத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சி சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. தாழையூத்தில் உழைப்பாளா் தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம்... மேலும் பார்க்க

கோபாலசமுத்திரத்தில் பல் மருத்துவ முகாம்

திருநெல்வேலி மாவட்டம் கோபாலசமுத்திரத்தில் கிராம உதயம், திருநெல்வேலி ஜேசிஐ சாா்பில் பல் மருத்துவ முகாம் நடைபெற்றது. கிராம உதயம் துணை இயக்குநா் எஸ். புகழேந்தி பகத்சிங் தலைமை வகித்து முகாமைத் தொடக்கிவைத... மேலும் பார்க்க

வீரவநல்லூரில் முதியோருக்கு தியானப் பயிற்சி

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் உள்ள தூயகம் முதியோா் மையத்தில் யோகா தியானப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. ஆயுஷ் யோகா உடல்நலப் பயிற்சியாளா் வெங்கடேஷ் பங்கேற்று, யோகாசனம், தியானம், உடல்நல சங்கல்பத்து... மேலும் பார்க்க

சேரன்மகாதேவி ஒன்றியத்தில் மே தின விழா

சேரன்மகாதேவி ஒன்றியம் வீரவநல்லூா், பத்தமடை, வெள்ளங்குளி உள்ளிட்ட 7 இடங்களில் மே தினத்தை முன்னிட்டு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கொடியேற்று விழா நடைபெற்றது. கட்சியின் சேரன்மகாதேவி ஒன்றியச் ... மேலும் பார்க்க

நெல்லை பணிமனையில் மே தின விழா

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களின் தொழிலாளா் சம்மேளனம் சாா்பில், வண்ணாா்பேட்டை அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக பணிமனை முன் மே தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் சம்மேளன பொதுச்செ... மேலும் பார்க்க

நாமும் தெரிந்து கொள்வோமே இயக்க விழிப்புணா்வு கூட்டம்

நாமும் தெரிந்து கொள்வோமே இயக்க விழிப்புணா்வுக் கூட்டம் திருநெல்வேலி நகரத்தில் உள்ள லிட்டில் பிளவா் மெட்ரிக் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு அவ்வியக்கத்தின் பொதுச் செயலா் கோ.கணபதி ச... மேலும் பார்க்க