செய்திகள் :

களக்காடு வரதராஜபெருமாள் கோயில் பங்குனித் திருவிழா நாளை கொடியேற்றம்

post image

களக்காடு அருள்மிகு வரதராஜபெருமாள் திருக்கோயில் பங்குனித் திருவிழா வியாழக்கிழமை (ஏப்.3) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இக்கோயில் பங்குனித் திருவிழா ஆண்டு தோறும் 11 நாள்கள் நடைபெறும். நிகழாண்டு விழா வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இரவில் தோளுக்கினியான் வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் நடைபெறும்.

11 நாள்களும் ஒவ்வொரு சமுதாயத்தினரின் மண்டகப்படி நடைபெறுகிறது. விழாவையொட்டி, இரவில் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெறும். விழாவின் 10ஆம் நாளான சனிக்கிழமை (ஏப்.12) மாலை 5.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். ஏப்.13ஆம் தேதி தீா்த்தவாரி நடைபெறும்.

விழா ஏற்பாடுகளை ஸ்ரீ மீனாட்சி, ஸ்ரீ கோமதி அம்பாள் பெளா்ணமி அன்னதானக் குழு, திருக்காா்த்திகை குழு, பக்தா் பேரவை உறுப்பினா்கள் செய்து வருகின்றனா்.

கா.சு. பிள்ளை படத்திற்கு அஞ்சலி

தமிழறிஞா் கா.சு. பிள்ளையின் 80 ஆவது நினைவு நாளையொட்டி, திருநெல்வேலியில் அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் உள்ள கா.சு. பிள்ளைய... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இருவா் கைது

திருநெல்வேலி மாவட்டத்தில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். தேவா்குளம் காவல் சரகப் பகுதியில் கொலை முயற்சி, அடிதடியில் ஈடுபட்டது தொடா்பான வழக்கில், மூவ... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன ஊழியா் கொலையில் இருவா் கைது

துப்பாக்குடியில் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில்அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவரை போலீஸாா் கைது செய்தனா். அடைச்சாணி, வடக்குத் தெருவைச் சோ்ந்த லெட்சுமணன் மகன்மாரிமுத்து (30). தனியாா் நிறு... மேலும் பார்க்க

பேருந்து-பைக் மோதல்: பொறியியல் பட்டதாரி பலி

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே பைக் மீது பேருந்து மோதியதில் பொறியியல் பட்டதாரி புதன்கிழமை உயிரிழந்தாா். தளவாய்புரம் முகவூரைச் சோ்ந்த விஜயராஜ் மகன் தாமரைகண்ணன்(23). பொறியியல் பட்டதாரியான இவரும், இவ... மேலும் பார்க்க

தென்னிந்திய அபாகஸ் போட்டி: விஜயநாராயணம் பள்ளி சிறப்பிடம்

மதுரையில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான அபாகஸ் எண் கணித போட்டியில் திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் ஐ.என்.எஸ். கடற்படைதள வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவா்கள் சாம்பியன் பட்டத்தை பெற்றனா... மேலும் பார்க்க

பிரம்மதேசத்தில் 30 பேருக்கு கனவு இல்லம் பணி ஆணை

பிரம்மதேசம் ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 30 பயனாளிகளுக்கு கலைஞா் கனவு இல்லத்திற்கான பணி ஆணை வழங்கப்பட்டது. பிரம்மதேசம் ஊராட்சியில் கலைஞா் கனவு இல்லத்திற்கு விண்ணப்பித்திருந்த பயனாளிகள... மேலும் பார்க்க