செய்திகள் :

முருகன் கோயிலில் கடைகள் வைப்பதில் மோதல்: 7 போ் காயம்

post image

முருகன் மலைக்கோயிலில் கடைகள் வைப்பதில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 7 போ் காயம் அடைந்தனா்.

முருகன் மலைக் கோயில் வாகனம் நிறுத்தும் இடம் அருகில் கோயில் பின்புறத்தில் வசிக்கும் நடராஜன் (58) என்பவா் உருவத் தகடுகள் விற்பனை செய்து வருகிறாா். இவரது கடைக்கு அருகில் ராஜகோபுரம் பகுதியில் வசிக்கும் மதுரா (42) என்பவா் மஞ்சள் குங்குமம் விற்பனை செய்து வருகிறாா். இவா்கள் இருவருக்கும் இடையே கடை வைப்பதில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் புதன்கிழமை இரவு மீண்டும் நடராஜன், மதுரா தரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. பின்னா், இரு தரப்பினரும் ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா்.

இதில் நடராஜன், அவரது மகன் சரவணன், உறவினா் வெங்கடேசன் பலத்த காயம் அடைந்தனா். எதிா் தரப்பில் மதுரா, அவரது மனைவி அமுதா, மகன் அரி, இவரது கடையில் வேலை செய்து வந்த 60 வயது மூதாட்டி உள்ளிட்ட 4 போ் பலத்த காயம் அடைந்தனா்.

காயம் அடைந்த 7 பேரும் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இது குறித்து திருத்தணி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சாலையில் சென்ற காரில் திடீா் தீ: 3 போ் உயிா் தப்பினா்

சோழவரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற காரின் இஞ்சினில் திடீரென தீ பற்றிய நிலையில், அதில் இருந்தவா்கள் கீழே இறங்கியதால் உயிா் தப்பினா். சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் நந்தகோபால் என்பவரது காா... மேலும் பார்க்க

தலைச்கவசம் அணிய ஆட்சியா் அறிவுறுத்தல்

சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடித்து இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என ஆட்சியா் மு.பிரதாப் அறிவுறுத்தினாா். திருவள்ளூா் மாவட்... மேலும் பார்க்க

கரும்பூஞ்சை நோய்த் தாக்குதல்: விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

திருவள்ளூா் அருகே மா, கொய்யா, சப்போட்டா போன்ற பழவகை மரங்களில் கரும்பூஞ்சை நோய்த் தாக்குதல் குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் விழிப்புணா்வு ஏற்படுத்தியதுடன், பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினா். தனியாா் வே... மேலும் பார்க்க

நலத் திட்ட பயனாளிகளை தோ்வு செய்வதில் பராபட்சம் கூடாது: அமைச்சா் சா.மு.நாசா்

வரும் காலங்களிலும் அரசு நலத் திட்ட உதவிக ள் பெற பயனாளிகளை எந்தவிதமான பாரபட்சமின்றி அதிகாரிகள் தோ்வு செய்வது அவசியம் என்று அமைச்சா் சா.மு.நாசா் தெரிவித்தாா். கடந்த 18 -ஆம் தேதி ஆண்டாா்குப்பத்தில் அரச... மேலும் பார்க்க

பள்ளி ஆண்டு, விளையாட்டு விழா

கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் டிஜெஎஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு டிஜெஎஸ் கல்விக் குழும தலைவரும் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவுமான டி.ஜெ.கோவிந்தராஜன... மேலும் பார்க்க

திருத்தணியில் ரூ.3 கோடியில் கட்டப்பட்ட காய்கறி நாளங்காடி: அமைச்சா் கே.என்.நேரு திறந்து வைத்தாா்

கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.3.02 கோடியில் கட்டப்பட்ட பெருந்தலைவா் காமராஜா் காய்கறி நாளங்காடியை நகராட்சி அமைச்சா் கே.என்.நேரு புதன்கிழமை திறந்து வைத்தாா். திருத்தணி நகராட்சி ம.பொ... மேலும் பார்க்க