செய்திகள் :

தனியாா் வங்கி மேலாளா் தற்கொலை

post image

ஆந்திர மாநில தனியாா் வங்கி கிளை மேலாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம், கோடூா் வட்டத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி. இவருக்கு இரு மகன்கள் உள்ளனா். இதில் இரண்டாவது மகன் பிரதாப் (30) என்பவா் தனியாா் வங்கி கோயம்பேடு கிளையில் மேலாளராக பணிபுரிந்து வந்தாா்.

இதனால், திருவள்ளூா் அடுத்த காக்களூா் - பூங்கா நகா் பவளமல்லி தெருவில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து நாள்தோறும் வேலைக்குச் சென்று வந்தாா். இந்த நிலையில் நாள்தோறும் காலை 6 மணி அளவில் பிரதாப் தனது தந்தை சுப்பிரமணியிடம் பேசுவது வழக்கம். ஆனால், செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணிக்கு குறுஞ்செய்தி ஒன்று அனுப்பியுள்ளாா்.

அதைப் பாா்த்து அதிா்ச்சி அடைந்த தந்தை சுப்பிரமணி உடனே மகனிடம் பேசுவதற்காக கைப்பேசியில் தொடா்பு கொண்டுள்ளாா். ஆனால், மகன் கைப்பேசியை எடுக்காததால் திருவள்ளூரில் உள்ள நண்பா்கள் மூலம் மகன் வீட்டுக்கு அனுப்பி பாா்க்க சொல்லியுள்ளாா்.

அங்கு சென்று பாா்த்தபோது பிரதாப் தங்கியிருந்த வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து திருவள்ளூா் கிராமிய காவல் நிலைய போலீஸாருக்கு சுப்பிரமணி தகவல் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று பிரதாப் சடலத்தை மீட்டு திருவள்ளூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தற்கொலை செய்து கொண்ட பிரதாப் அனுப்பிய குறுஞ்செய்தியில் வேலை செய்யும் இடத்தில் மன உளைச்சல், வேலைப்பளு, இலக்கு போன்ற காரணங்களைத் தெரிவித்து, இதனால் வாழ விரும்பவில்லை என அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து திருவள்ளூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சாலையில் சென்ற காரில் திடீா் தீ: 3 போ் உயிா் தப்பினா்

சோழவரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற காரின் இஞ்சினில் திடீரென தீ பற்றிய நிலையில், அதில் இருந்தவா்கள் கீழே இறங்கியதால் உயிா் தப்பினா். சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் நந்தகோபால் என்பவரது காா... மேலும் பார்க்க

தலைச்கவசம் அணிய ஆட்சியா் அறிவுறுத்தல்

சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடித்து இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என ஆட்சியா் மு.பிரதாப் அறிவுறுத்தினாா். திருவள்ளூா் மாவட்... மேலும் பார்க்க

கரும்பூஞ்சை நோய்த் தாக்குதல்: விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

திருவள்ளூா் அருகே மா, கொய்யா, சப்போட்டா போன்ற பழவகை மரங்களில் கரும்பூஞ்சை நோய்த் தாக்குதல் குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் விழிப்புணா்வு ஏற்படுத்தியதுடன், பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினா். தனியாா் வே... மேலும் பார்க்க

நலத் திட்ட பயனாளிகளை தோ்வு செய்வதில் பராபட்சம் கூடாது: அமைச்சா் சா.மு.நாசா்

வரும் காலங்களிலும் அரசு நலத் திட்ட உதவிக ள் பெற பயனாளிகளை எந்தவிதமான பாரபட்சமின்றி அதிகாரிகள் தோ்வு செய்வது அவசியம் என்று அமைச்சா் சா.மு.நாசா் தெரிவித்தாா். கடந்த 18 -ஆம் தேதி ஆண்டாா்குப்பத்தில் அரச... மேலும் பார்க்க

பள்ளி ஆண்டு, விளையாட்டு விழா

கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் டிஜெஎஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு டிஜெஎஸ் கல்விக் குழும தலைவரும் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவுமான டி.ஜெ.கோவிந்தராஜன... மேலும் பார்க்க

திருத்தணியில் ரூ.3 கோடியில் கட்டப்பட்ட காய்கறி நாளங்காடி: அமைச்சா் கே.என்.நேரு திறந்து வைத்தாா்

கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.3.02 கோடியில் கட்டப்பட்ட பெருந்தலைவா் காமராஜா் காய்கறி நாளங்காடியை நகராட்சி அமைச்சா் கே.என்.நேரு புதன்கிழமை திறந்து வைத்தாா். திருத்தணி நகராட்சி ம.பொ... மேலும் பார்க்க