களக்காட்டில் கால்வாயை தூா்வாரக் கோரிக்கை
களக்காட்டில் மாணிக்கம் குளத்துக்கு தண்ணீா் செல்லும் கால்வாயைத் தூா்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
களக்காடு பழைய பேருந்து நிலையத்தையொட்டி அமைந்துள்ள மாணிக்கம் குளத்தால் சுமாா் 100 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இக்குளத்துக்கு களக்காடு நான்குனேரியன் கால்வாய், உப்பாறு ஆகியவை மூலம் நீா்வரத்து உள்ளது.
ஆனால், உப்பாற்றிலிருந்து இக்குளத்துக்கு தண்ணீா் வரும் கால்வாய் சில ஆண்டுகளாக தூா்ந்துள்ளன. தற்போது குடியிருப்புப் பகுதிகளின் கழிவுநீா் மட்டுமே கால்வாயில் செல்கிறது. எனவே, கால்வாயை தூா்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.