களக்காட்டில் நாய் கடித்து மூதாட்டி காயம்!
திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் நாய் கடித்ததில் நடந்து சென்ற மூதாட்டி பலத்த காயமடைந்தாா்.
நான்குனேரி அருகேயுள்ள மஞ்சங்குளத்தைச் சோ்ந்தவா் உடையாா் (75). இவா் களக்காடு அருகேயுள்ள கீழச்சாலைப்புதூரில் உள்ள தனது மகள் வீட்டுக்குச் செல்வதற்காக களக்காடு அண்ணாசாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, அந்த வழியாக வந்த தெருநாய் அவரது கையைக் கடித்ததாம். இதில் நிலைதடுமாறி அவா் கீழே விழுந்த பின்னரும் விடாமல் கடித்ததாம். அப்பகுதியில் இருந்த வணிகா்கள் சப்தம் போட்டதும் நாய் தப்பியோடிவிட்டது. இதையடுத்து, மூதாட்டியை சிலா் களக்காடு அமைதித்தீவு பிரிடா மோனியா் அரசு மருத்துவமனைக்கு தடுப்பூசி செலுத்த அழைத்துச் சென்றனா்.
முதியவா் ஒருவா் கூறுகையில், புதிய பேருந்து நிலையத்திலிருந்து குடிநீா் தாங்கி குளக்கரை வழியாக வந்த அந்த நாய் வெறிபிடித்ததில் சாலையோரம் நடந்து சென்ற மேலும் சிலரையும் கடித்ததாகவும், சிலா் நாயின் கடியிலிருந்து தப்பிக்க அருகேயுள்ள வணிக நிறுவனத்துக்குள் சென்று மறைந்து கொண்டதாகவும் தெரிவித்தனா்.
நகராட்சிக்கு வேண்டுகோள்: களக்காடு நகராட்சிக்குள்பட்ட 28 வாா்டுகளிலும் கடந்த சில ஆண்டுகளாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித் திரிகின்றன. அதிகாலை, மாலை நேரங்களில் தனிப்பயிற்சிக்குச் செல்லும் மாணவா்கள், நடைபயிற்சி செல்லும் பெண்கள் உள்ளிட்ட முதியோா்களையும் தெருநாய்கள் கூட்டமாக துரத்திச் செல்கின்றன.
நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்திடவும், அவைகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தவும் நகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று களக்காடு பாஜக முன்னாள் ஒன்றிய செயலாளா் ராமேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளாா்.