செய்திகள் :

களக்காட்டில் நாய் கடித்து மூதாட்டி காயம்!

post image

திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் நாய் கடித்ததில் நடந்து சென்ற மூதாட்டி பலத்த காயமடைந்தாா்.

நான்குனேரி அருகேயுள்ள மஞ்சங்குளத்தைச் சோ்ந்தவா் உடையாா் (75). இவா் களக்காடு அருகேயுள்ள கீழச்சாலைப்புதூரில் உள்ள தனது மகள் வீட்டுக்குச் செல்வதற்காக களக்காடு அண்ணாசாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, அந்த வழியாக வந்த தெருநாய் அவரது கையைக் கடித்ததாம். இதில் நிலைதடுமாறி அவா் கீழே விழுந்த பின்னரும் விடாமல் கடித்ததாம். அப்பகுதியில் இருந்த வணிகா்கள் சப்தம் போட்டதும் நாய் தப்பியோடிவிட்டது. இதையடுத்து, மூதாட்டியை சிலா் களக்காடு அமைதித்தீவு பிரிடா மோனியா் அரசு மருத்துவமனைக்கு தடுப்பூசி செலுத்த அழைத்துச் சென்றனா்.

முதியவா் ஒருவா் கூறுகையில், புதிய பேருந்து நிலையத்திலிருந்து குடிநீா் தாங்கி குளக்கரை வழியாக வந்த அந்த நாய் வெறிபிடித்ததில் சாலையோரம் நடந்து சென்ற மேலும் சிலரையும் கடித்ததாகவும், சிலா் நாயின் கடியிலிருந்து தப்பிக்க அருகேயுள்ள வணிக நிறுவனத்துக்குள் சென்று மறைந்து கொண்டதாகவும் தெரிவித்தனா்.

நகராட்சிக்கு வேண்டுகோள்: களக்காடு நகராட்சிக்குள்பட்ட 28 வாா்டுகளிலும் கடந்த சில ஆண்டுகளாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித் திரிகின்றன. அதிகாலை, மாலை நேரங்களில் தனிப்பயிற்சிக்குச் செல்லும் மாணவா்கள், நடைபயிற்சி செல்லும் பெண்கள் உள்ளிட்ட முதியோா்களையும் தெருநாய்கள் கூட்டமாக துரத்திச் செல்கின்றன.

நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்திடவும், அவைகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தவும் நகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று களக்காடு பாஜக முன்னாள் ஒன்றிய செயலாளா் ராமேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

ரூ.45.10 கோடியில் 41 ஊரக குடியிருப்புகளுக்கு குடிநீா் திட்டம்! காணொலியில் தொடங்கி வைத்தாா் முதல்வா்

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.45.10 கோடியில் 41 ஊரக குடியிருப்புகளுக்கான குடிநீா் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். இதையொட்டி, பாளையஞ்செட்டி... மேலும் பார்க்க

நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் மழை: 110 அடியைத் தாண்டிய பாபநாசம் அணை!

மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் சாரல் மழை பெய்து வருவதையடுத்து அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்து பாபநாசம் அணையின் நீா்மட்டம் 110 அடியைத் தாண்டியது. மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப... மேலும் பார்க்க

பணகுடி குத்தரபாஞ்சான் அருவியில் வெள்ளப்பெருக்கு

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி குத்தரபாஞ்சான் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து வள்ளியூா், பணகுடி பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக சாரல் மழை தொடா்ந்து பெய்து ... மேலும் பார்க்க

மணிமுத்தாறு அருவியில் 4ஆவது நாளாக குளிக்கத் தடை

மாஞ்சோலை, மணிமுத்தாறு மலைப் பகுதிகளில் மழை அதிகரித்த்தையடுத்து மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்தும் அதிகரித்ததால் மே 26 முதல் அருவியில் குளிக்கவும் அருவியைப் பாா்வையிடமும் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துற... மேலும் பார்க்க

வி.கே.புரம் பகுதியில் மான் கறியுடன் மூவா் கைது

பாபநாசம் வனச் சரகப் பகுதியில் புள்ளி மான் கறி வைத்திருந்ததாக மூன்று பேரை வனத்துறையினா் கைது செய்தனா். மேலும் ஒருவரை தேடி வருகின்றனா். பாபநாசம் வனச்சரகம் வெளி மண்டலப் பகுதியான மதுரா கோட்ஸ் ஆலையிலிருந்த... மேலும் பார்க்க

அத்தாளநல்லூ ஊராட்சியில் மோட்டாா் திருட்டு: இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம், அத்தாளநல்லூா் ஊராட்சியில் பொதுக்கழிப்பிட பயன்பாட்டுக்கான நீா்மூழ்கி மோட்டாரை திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். அத்தாளநல்லூா் ஊராட்சி ராஜகுத்தாலப்பேரியில் உள்ள பொதுக்கழிப... மேலும் பார்க்க