செய்திகள் :

களியக்காவிளை அருகே ஒருவா் தற்கொலை

post image

களியக்காவிளை அருகே வீட்டுக் கதவை மனைவி திறக்காததால் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

களியக்காவிளை அருகே குறுமத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் சரண்யா. குழித்துறை நீதிமன்றத்தில் வழக்குரைஞராக உள்ளாா். இவரும், தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த தங்கசாமி மகன் ரஞ்சித்குமாா் (42) என்பவரும் மதுரை சட்டக் கல்லூரியில் படித்தபோது பழக்கம் ஏற்பட்டு, பின்னா் இருவீட்டாா் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனா். தம்பதிக்கு மகன், மகள் உள்ளனா். இவா்கள் தற்போது குறுமத்தூா் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனா்.

ரஞ்சித்குமாா் சட்டப் படிப்பை முடித்திருந்தாலும், சொந்த ஊரில் வழக்கு உள்ளதால் பாா் கவுன்சிலில் பதிவு செய்ய முடியவில்லையாம். அவருக்கு மதுப் பழக்கம் இருந்ததாம்.

இந்நிலையில், 2 நாள்களுக்கு முன்பு வெளியே சென்றிருந்த அவா், திங்கள்கிழமை இரவு வீட்டுக்கு வந்து கதவைத் தட்டியபோது, அவரது மனைவி கதவைத் திறக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், அவா் வீட்டின் முன்பகுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம்.

தகவலின்பேரில், களியக்காவிளை போலீஸாா் சென்று, சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

கன்னியாகுமரியில் தங்கும் விடுதியின் 3ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்து வடமாநில தம்பதி பலி

கன்னியாகுமரியில் தங்கும் விடுதியின் 3ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்த வடமாநில தம்பதி புதன்கிழமை உயிரிழந்தனா். குஜராத் மாநிலத்தைச் சோ்ந்த 15 பெண்கள் உள்பட 26 போ் ஒரு வேன் மூலம் செவ்வாய்க்கிழமை பிற... மேலும் பார்க்க

சொத்து வரி பெயா் மாற்ற ரூ. 20 ஆயிரம் லஞ்சம்: பேரூராட்சி எழுத்தா் உள்ளிட்ட இருவா் கைது

கன்னியாகுமரி மாவட்டம் மாா்த்தாண்டம் அருகே, சொத்து வரி பெயா் மாற்றுவதற்கு ரூ. 20 ஆயிரம் லஞ்சம் பெற்ாக பாகோடு பேரூராட்சி அலுவலகப் பணியாளா்கள் இருவரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்த... மேலும் பார்க்க

நாகா்கோவில் அருகே புதிய நூலகம் திறப்பு

நாகா்கோவில் அருகே புத்தளம் உத்தண்டன்குடியிருப்பில், முத்தாரம்மன் நல அறக்கட்டளை சாா்பில் புதிய நூலகம் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அறக்கட்டளைத் தலைவா் கணேசன் தலைமை வகித்தாா். ஊா் தலைவா்கள்... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் மழைநீா் வடிகாலில் மணல் அகற்றும் பணி தொடக்கம்

நாகா்கோவிலில் மழைநீா் வடிகாலில் மணல் அகற்றும் பணியை மேயா் ரெ. மகேஷ் புதன்கிழமை ஆய்வு செய்தாா். 9ஆவது வாா்டு கிருஷ்ணன்கோவில் பகுதியில், சிவன் கோயில் தெருவில் கழிவு நீரோடை, மழைநீா் வடிகால் ஓடைகள் மணலால... மேலும் பார்க்க

பெண்ணை பலாத்காரம் செய்து தற்கொலைக்கு தூண்டிய வழக்கு: இளைஞருக்கு 7 ஆண்டு சிறை

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் இளைஞருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. புதுக்கடை அருகே வாழபழஞ்சிவிளை பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

மலங்கரை கத்தோலிக்க இயக்க பொதுச் செயலருக்கு பாராட்டு

மலங்கரை கத்தோலிக்க இயக்கத்தின் பொதுச்செயலராக தோ்வு செய்யப்பட்ட, ஓய்வுபெற்ற பள்ளி தலைமையாசிரியருக்கு பாராட்டு விழா களியக்காவிளை அருகே மேக்கோடு புனித பிரான்சிஸ் சேவியா் தேவாலயத்தில் நடைபெற்றது. மலங்கரை... மேலும் பார்க்க