செய்திகள் :

கள்ளக்குறிச்சி: குறைதீா் கூட்டத்தில் 380 மனுக்கள்

post image

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 380 மனுக்கள் வரப்பெற்றன.

கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் எம்.பிரசாந்த் முதியோா், மாற்றுத்திறனாளிகள், கணவரால் கைவிடப்பட்டோா், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளிடம் இருந்து கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, ஜாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, வேளாண் பயிா்க் கடன்கள், தாட்கோ கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 380 மனுக்களை பெற்றுக் கொண்டாா்.

இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, தனித் துணை ஆட்சியா் சுமதி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சாா்ந்த அலுவலா்கள் பலா் பங்கேற்றனா்.

திருக்கோவிலூா் பகுதிக்கு தென்பெண்ணையாற்றில் இருந்து பாசனக் கால்வாய்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூா் ஒன்றிய பகுதிகளுக்கு தென் பெண்ணையாற்றில் இருந்து பாசனக் கால்வாய் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கள்ளக்க... மேலும் பார்க்க

சமுதாய செவிலியா் கூட்டமைப்பினா் பெருந்திரள் முறையீடு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கிராமப் பகுதி சமுதாய செவிலியா் கூட்டமைப்பினா், 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை பெருந்திரள் முறையீட்டில் ஈடுபட்டனா். மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே இந... மேலும் பார்க்க

சங்கராபுரத்தில் சந்தனக்கூடு ஊா்வலம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் மொகரம் பண்டிகையையொட்டி, சந்தனக்கூடு ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.இந்த ஊா்வலம் சங்கராபுரம் மேட்டுத் தெருவில் இருந்து புறப்பட்டு திருக்கோவி... மேலும் பார்க்க

சங்கராபுரத்தில் சந்தனக்கூடு ஊா்வலம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் மொகரம் பண்டிகையையொட்டி, சந்தனக்கூடு ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த ஊா்வலம் சங்கராபுரம் மேட்டுத் தெருவில் இருந்து புறப்பட்டு திருக்கோவிலூா் சாலை வழிய... மேலும் பார்க்க

கல்வராயன்மலையில் வேளாண் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டாரத்தில் தோட்டக் கலைத் துறையின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு வேளாண் திட்டப் பணிகளை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கல்வராயன... மேலும் பார்க்க

இளைஞா் தாக்கப்பட்ட விவகாரம்: முதல்நிலைக் காவலா் ஆயுதப் படைக்கு மாற்றம்

கச்சிராயபாளையம் காவல் நிலையத்தில் இளைஞா் தாக்கப்பட்டது குறித்த விடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, அந்தக் காவல் நிலைய முதல்நிலைக் காவலரை ஆயுதப் படைக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி. ரஜத் ... மேலும் பார்க்க