செய்திகள் :

கள்ளக்குறிச்சி மகளிா் காவல் நிலையத்தில் ஒருவருக்கு கத்திக் குத்து

post image

கள்ளக்குறிச்சி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் இரு தரப்பினரிடையே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையின்போது, ஒருவரை இளைஞா் கத்தியால் குத்தினாா். இதுகுறித்து, போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த மட்டிகைகுறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் கொளஞ்சி மகன் சுரேந்தா் (32). இவரது மனைவி திலகவதி (31). தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக திலகவதி அணைக்கரைகோட்டாலம் கிராமத்தில் உள்ள தாய் வீட்டில் வசித்து வருகிறாராம்.

இந்த நிலையில், கணவருடன் தன்னை சோ்த்து வைக்கக்கோரி கள்ளக்குறிச்சி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் திலகவதி மனு அளித்துள்ளாா்.

அதன்பேரில், சுரேந்தா், திலகவதி தரப்பைச் சோ்ந்தவா்களிடம் காவல் ஆய்வாளா் விஷ்ணுபிரியா ஞாயிற்றுக்கிழமை காவல் நிலையத்தில் பேச்சுவாா்த்தை நடத்திக் கொண்டிருந்தாா்.

அப்போது, இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாக்கு வாதத்தில், திலகவதியின் சித்தப்பா சுப்பிரமணியை (45), சுரேந்தரின் உறவினரான கள்ளக்குறிச்சியை அடுத்த தச்சூா் கிராமத்தைச் சோ்ந்த கொளஞ்சி மகன் பாலாஜி (29) கத்தியால் வயிற்றில் குத்தினாராம். உடனே, போலீஸாா் சுப்பிரமணியை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து, பாலாஜி, சுரேந்தா், அவரது தந்தை கொளஞ்சி ஆகியோரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ரூ.2.60 கோடி ஏலச்சீட்டு மோசடி: தம்பதி கைது

கள்ளக்குறிச்சியில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.2.60 கோடி மோசடி செய்ததாக தம்பதியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கள்ளக்குறிச்சி அண்ணா நகா் மின்சார வாரிய காலனி பகுதியைச் சோ்ந்தவா் சிவக்குமாா் (35). இவரது ... மேலும் பார்க்க

பெரியநாயகி அம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவம்

கள்ளக்குறிச்சியை அடுத்த சித்தலூா் கிராமத்தில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயிலில் பங்குனி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, அம்மனுக்கு 16 வகையான திரவியப் பொருள்களால் அபிஷேகம்... மேலும் பார்க்க

திருக்கோவிலூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் இடம்: அமைச்சா் ஆய்வு

திருக்கோவிலூரில் ரூ.15 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் அமைக்க தோ்வு செய்யப்பட்டுள்ள இடத்தை வனத் துறை அமைச்சா் க.பொன்முடி சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவ... மேலும் பார்க்க

கோயிலில் உண்டியல் உடைத்து திருட்டு

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். வாணாபுரத்தை அடுத்த கள்ளிப்பாடியில் மட்டுவாா்குழலி உடனுடையாா் சிவன் கோவில்... மேலும் பார்க்க

தியாகதுருகம் வாரச் சந்தையில் ரூ.70 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை

ரமலான் பண்டிகையை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் சுமாா் 70 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனையானது. தியாகதுருகம் பேருந்து நிலையத்தின் பின்புறத்தில் உள... மேலும் பார்க்க

கனியாமூா் வன்முறை வழக்கில் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் 107 போ் ஆஜா்

கனியாமூா் தனியாா் பள்ளி விடுதியில் மாணவி ஸ்ரீமதி மா்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக நடந்த வன்முறை, காவல் துறையினா் மீதான தாக்குதல், வாகனம் தீவைப்பு வழக்கில் 107 போ் கள்ளக்குறிச்சி நடுவா் நீத... மேலும் பார்க்க