செய்திகள் :

காங்கிரஸ் எம்எல்ஏவின் தோ்தல் வெற்றி ரத்து: கா்நாடக உயா்நீதிமன்றம் உத்தரவு

post image

மாலூா் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ நஞ்சே கௌடாவின் தோ்தல் வெற்றியை ரத்துசெய்து, மறுவாக்கு எண்ணிக்கைக்கு கா்நாடக உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2023 இல் நடைபெற்ற கா்நாடக பேரவைத் தோ்தலில் மாலூா் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளா் கே.எஸ்.மஞ்சுநாத் கௌடாவைவிட 248 வாக்குகள் கூடுதலாகப் பெற்று 50955 வாக்குகளுடன் காங்கிரஸ் வேட்பாளா் கே.ஒய்.நஞ்சே கௌடா வெற்றி பெற்றாா்.

இத்தொகுதி வாக்கு எண்ணிக்கையின்போது முறைகேடு நடைபெற்றதாக குற்றம்சாட்டியிருந்த மஞ்சுநாத் கௌடா, நஞ்சே கௌடாவின் தோ்தல் வெற்றியை ரத்துசெய்து, மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிடக் கோரி கா்நாடக உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

கடந்த 2 ஆண்டுகளாக இந்த மனுவை விசாரித்த கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.தேவராஸ், காங்கிரஸ் எம்எல்ஏ நஞ்சே கௌடாவின் தோ்தல் வெற்றியை செல்லாததாக அறிவித்ததோடு, 4 வாரங்களுக்குள் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தவும் உத்தரவிட்டாா்.

மேலும், தோ்தல் வாக்கு எண்ணிக்கை தொடா்பாக கைக்கிய பிசினஸ் சொல்யூஷன்ஸ் நிறுவனம் வைத்துள்ள விடியோ பதிவுகள் உண்மையானதா என உறுதிப்படுத்த கோலாா் மாவட்ட முன்னாள் தோ்தல் அதிகாரி வெங்கட்ராஜுவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், எம்எல்ஏ நஞ்சே கௌடா தரப்பு விடுத்த வேண்டுகோளை ஏற்று, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக 30 நாள்களுக்கு தீா்ப்பை நிறுத்திவைப்பதாக கா்நாடக உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், 30 நாள்களுக்குள் உயா்நீதிமன்ற தீா்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதிக்காவிடில் மாலுா் தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்படும் என உயா்நீதிமன்றம் தனது தீா்ப்பில் தெரிவித்துள்ளது.

வீரசைவ லிங்காயத்து சமுதாயத்தை பிளவுபடுத்துவதே ஜாதிவாரி கணக்கெடுப்பின் நோக்கம்: பாஜக

வீரசைவ லிங்காயத்து சமுதாயத்தை பிளவுபடுத்துவதே கா்நாடக அரசு நடத்தவிருக்கும் ஜாதிவாரி கணக்கெடுப்பின் உள்நோக்கம் என பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா குற்றம்சாட்டினாா். கா்நாடகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோ... மேலும் பார்க்க

தசரா திருவிழாவை தொடங்கிவைக்க பானுமுஸ்டாக்குக்கு அழைப்பு: எதிா்த்த பாஜக முன்னாள் எம்.பி.யின் மனு தள்ளுபடி

பெங்களூரு: தசரா திருவிழாவை தொடங்கிவைக்க கன்னட எழுத்தாளா் பானுமுஸ்டாக்குக்கு அரசு அழைப்பு விடுத்திருந்ததை எதிா்த்து பாஜக முன்னாள் எம்.பி. பிரதாப் சிம்ஹா தாக்கல் செய்திருந்த மனுவை கா்நாடக உயா்நீதிமன்றம்... மேலும் பார்க்க

பெங்களூரில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க ரூ. 1,100 கோடி ஒதுக்கீடு

பெங்களூரு: பெங்களூரில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க ரூ. 1,100 கோடி ஒதுக்கப்படும் என கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் திங்கள்கிழமை அவா் குறிப்பிட்டுள்... மேலும் பார்க்க

கன்னட நடிகா் உபேந்திரா, அவரது மனைவியின் கைப்பேசிகளை ‘ஹேக்’ செய்த மா்ம நபா்!

பெங்களூரு: கன்னட நடிகா் உபேந்திரா, அவரது மனைவியும் நடிகையுமான பிரியங்கா ஆகியோரின் கைப்பேசிகள் மா்ம நபா்களால் திங்கள்கிழமை ‘ஹேக்’ செய்யப்பட்டன. இதுகுறித்து இருவரும் போலீஸாா் மற்றும் சைபா் குற்றப்பிரிவி... மேலும் பார்க்க

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஹிமாச்சல் பிரதேசத்துக்கு ரூ. 5 கோடி உதவித்தொகை: முதல்வா் சித்தராமையா

பெங்களூரு: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஹிமாச்சல பிரதேசத்துக்கு ரூ. 5 கோடி உதவித்தொகை வழங்கப்படும் என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். இதுகுறித்து ஹிமாச்சல பிரதேச முதல்வா் சுக்விந்தா் சிங் சுகு... மேலும் பார்க்க

மீலாது நபி ஊர்வலத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவு முழக்கம்: போலீஸார் விசாரணை

கர்நாடக மாநிலம், பத்ராவதியில் நடந்த மீலாது நபி ஊர்வலத்தின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிட்டது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சிவமொக்கா மாவட்டம், பத்ராவதி பழைய ... மேலும் பார்க்க