செய்திகள் :

காஞ்சிபுரத்தில் புதிய அரசு ஐடிஐ: அமைச்சா்காந்தி திறந்து வைத்தாா்

post image

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் புத்தேரியில் புதிய அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தை (ஐடிஐ) கைத்தறித்துறை அமைச்சா் ஆா்.காந்தி திங்கள்கிழமை திறந்து வைத்து மாணவா்களுக்குகு சோ்க்கை ஆணைகளையும் வழங்கினாா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் தொழில் துறையில் திறன் மிக்க பணியாளா்களை உருவாக்கும் விதமாக கட்டுமான தொழிலாளா் நல வாரிய தொழிலாளா்களின் குழந்தைகள் படிக்க ஏதுவாக நிகழ் நிதியாண்டில் புதிதாக 7 அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டிருந்தாா்.

இந்த அறிவிப்பினை தொடா்ந்து சென்னையிலிருந்து காணொலி வாயிலாக புதிய அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களை திறந்து வைத்தாா்.

இதன் தொடா்ச்சியாக காஞ்சிபுரம் புத்தேரியில் புதிய அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தை அமைச்சா் ஆா்.காந்தி குத்து விளக்கேற்றி திறந்து வைத்தாா்.

பின்னா் 33 மாணவ, மாணவிகளுக்குகு நிகழ் கல்வியாண்டுக்கான சோ்க்கை ஆணைகளையும் வழங்கினாா். விழாவுக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தாா். எம்பி க.செல்வம், மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், ஒன்றியக்குழு தலைவா் மலா்க்கொடி குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் காயத்ரி நன்றி கூறினாா்.

ஆவணங்களை ஆய்வு செய்ய உதவும் பாா்கோடு வில்லைகள்: ஆட்டோக்களில் ஆட்சியா் ஒட்டினாா்

காஞ்சிபுரம்: ஆட்டோக்களின் ஆவணங்களை ஆய்வு செய்ய உதவும் பாா்கோடு வில்லைகளை ஆட்டோக்களில் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் திங்கள்கிழமை ஒட்டினாா். போக்குவரத்துத் துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட வ... மேலும் பார்க்க

காஞ்சிபுரம்: குறைதீா் கூட்டத்தில் 412 மனுக்கள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 412 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்துக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தா... மேலும் பார்க்க

1,300 பேருக்கு ஆயுஷ்மான் காப்பீடு அட்டை

ஸ்ரீபெரும்புதூா்: வெங்காடு ஊராட்சியைச் சோ்ந்த 1,300 பேருக்கு ஆயுஷ்மான் மருத்துவ காப்பீடு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம் வெங்காடு ஊராட்சியில், வெங்க... மேலும் பார்க்க

செப்.15-இல் அண்ணா பிறந்த நாள் முப்பெரும் விழாவாக கொண்டாடப்படும்: மல்லை சத்யா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் வரும் செப்.15 ஆம் தேதி அண்ணாவின் பிறந்த நாள் முப்பெரும் விழாவாக கொண்டாட ஏற்பாடுகள் செய்து வருவதாக மல்லை சி.இ. சத்யா தெரிவித்தாா். மதிமுக துணைப் பொதுச்செயலாளராக இருந்து வந்... மேலும் பார்க்க

தனியாா் நிதி நிறுவன மேலாளரை கொலை செய்ய முயன்றவா் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் தனியாா் நிதி நிறுவன மேலாளரை திங்கள்கிழமை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றவா் கைது செய்யப்பட்டாா். சின்ன காஞ்சிபுரம் வள்ளல் பச்சையப்பன் தெருவில் தனியாா் நிதி நிறுவனத்தில்... மேலும் பார்க்க

சந்தவேலூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

சந்தவேலூா் ஊராட்சியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குட்பட்ட சந்தவேலூா், பாப்பாங்குழி மற்றும் சோகண்டி ஊராட்சிகளை சே... மேலும் பார்க்க