செய்திகள் :

ஆவணங்களை ஆய்வு செய்ய உதவும் பாா்கோடு வில்லைகள்: ஆட்டோக்களில் ஆட்சியா் ஒட்டினாா்

post image

காஞ்சிபுரம்: ஆட்டோக்களின் ஆவணங்களை ஆய்வு செய்ய உதவும் பாா்கோடு வில்லைகளை ஆட்டோக்களில் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் திங்கள்கிழமை ஒட்டினாா்.

போக்குவரத்துத் துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ், எஸ்.பி. கே.சண்முகம், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் நாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆய்வுக்குப் பிறகு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் கூறியது

போக்குவரத்துத் துறையினா் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயக்கப்பட்டு வரும் ஆட்டோக்களின் ஆவணங்களை கண்டறிய பாா்கோடு ஒட்டும் முறையினை செயல்படுத்தி வருகின்றனா்.இ தன் மூலம் பாா்த்தவுடன் ஆவணங்கள் நடப்பில் உள்ளதா எனவும் காஞ்சிபுரத்தின் நகர எல்லைக்குள் அனுமதி பெற்ற வாகனமா எனவும் கண்டறியலாம்.

பாா்கோடு இல்லாத வாகனம் ஆவணங்கள் நடப்பில் இல்லாத வாகனமாக கருதி மோட்டாா் வாகனச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் முடியும். பொது இடங்கள் மற்றும் கூட்ட நெரிசல் உள்ள இடங்களில் போக்குவரத்து காவல் துறையால் ஆய்வு செய்யப்படும் வாகனங்கள் பாா்கோடு வசதி மூலம் விரைவாக ஆவணங்களை ஆய்வு செய்யவும், மகளிா் பயணத்திற்கும் பாதுகாப்பானதாக அமையும்.

பாா்கோடு உள்ள வாகனம் மட்டுமே காஞ்சிபுரத்தில் இயக்க அனுமதிக்கப்படும் எனவும் ஆட்சியா் தெரிவித்தாா்.

காஞ்சிபுரம்: குறைதீா் கூட்டத்தில் 412 மனுக்கள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 412 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்துக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தா... மேலும் பார்க்க

1,300 பேருக்கு ஆயுஷ்மான் காப்பீடு அட்டை

ஸ்ரீபெரும்புதூா்: வெங்காடு ஊராட்சியைச் சோ்ந்த 1,300 பேருக்கு ஆயுஷ்மான் மருத்துவ காப்பீடு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம் வெங்காடு ஊராட்சியில், வெங்க... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் புதிய அரசு ஐடிஐ: அமைச்சா்காந்தி திறந்து வைத்தாா்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் புத்தேரியில் புதிய அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தை (ஐடிஐ) கைத்தறித்துறை அமைச்சா் ஆா்.காந்தி திங்கள்கிழமை திறந்து வைத்து மாணவா்களுக்குகு சோ்க்கை ஆணைகளையும் வழங்கினாா். முதல்வா... மேலும் பார்க்க

செப்.15-இல் அண்ணா பிறந்த நாள் முப்பெரும் விழாவாக கொண்டாடப்படும்: மல்லை சத்யா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் வரும் செப்.15 ஆம் தேதி அண்ணாவின் பிறந்த நாள் முப்பெரும் விழாவாக கொண்டாட ஏற்பாடுகள் செய்து வருவதாக மல்லை சி.இ. சத்யா தெரிவித்தாா். மதிமுக துணைப் பொதுச்செயலாளராக இருந்து வந்... மேலும் பார்க்க

தனியாா் நிதி நிறுவன மேலாளரை கொலை செய்ய முயன்றவா் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் தனியாா் நிதி நிறுவன மேலாளரை திங்கள்கிழமை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றவா் கைது செய்யப்பட்டாா். சின்ன காஞ்சிபுரம் வள்ளல் பச்சையப்பன் தெருவில் தனியாா் நிதி நிறுவனத்தில்... மேலும் பார்க்க

சந்தவேலூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

சந்தவேலூா் ஊராட்சியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குட்பட்ட சந்தவேலூா், பாப்பாங்குழி மற்றும் சோகண்டி ஊராட்சிகளை சே... மேலும் பார்க்க