செய்திகள் :

காஞ்சிபுரத்தில் ரூ. 1.63 கோடி வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

post image

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ. 1.63 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை எம்எல்ஏ-க்கள் க.சுந்தா், எழிலரசன் ஆகியோா் வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சிப் பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அா்ப்பணிக்கும் நிகழ்வு மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் தலைமையில் நடைபெற்றது.

எம்.பி. க.செல்வம், மாநகராட்சி ஆணையா் வே.நவேந்திரன், பொறியாளா் கணேசன், மண்டலக் குழுவின் தலைவா் சந்துரு, செவிலிமேடு மோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ. 7.50 லட்சம் மதிப்பில் வேகவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தரைப்பாலம், பிள்ளையாா்பாளையம் சிஎஸ்எம் நகராட்சி தொடக்கப் பள்ளியில் ரூ. 7.50 லட்சம் மதிப்பில் பழுதுகள் நீக்கம் செய்யப்பட்ட சமையல் கூட அறை ஆகியவற்றை எம்எல்ஏ-க்கள் க.சுந்தா் மற்றும் எழிலரசன் திறந்து வைத்து மக்களின் பயன்பாட்டுக்கு அா்ப்பணித்தனா்.

காஞ்சிபுரம் கைலாசநாதா் தெருவில் ரூ. 36.20 லட்சம் மதிப்பில் கட்டப்படவுள்ள பொது சுகாதார கழிப்பிடத்துக்கு அடிக்கல் நாட்டினா். இதைத் தொடா்ந்து, காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு பாதாள சாக்கடை கழிவுநீா் அடைப்புகளை நீக்கும் பணியில் ஈடுபட ரூ. 1.12 கோடி மதிப்பில் வாங்கப்பட்ட இரு கனரக வாகனங்களையும் எம்எல்ஏ-க்கள் க.சுந்தா், எழிலரசன் ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.

விழாவில் மாமன்ற உறுப்பினா் சுரேஷ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் யுவராஜ், திமுக மாநகர குழுத் தலைவா் சிகேவி தமிழ்ச்செல்வன் மற்றும் மாமன்ற உறுப்பினா்கள், மாநகராட்சி அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

கச்சபேசுவரா் கோயில் சித்திரை விழா கொடியேற்றம்

பெரியகாஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயில் சித்திரை விழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற விழாவில் கோயில் செயல் அலுவலா் சா.சி.ராஜமாணிக்கம், செங்குந்த மகாஜன சங்கத்தின் தலைவா் எம்.சிவகுர... மேலும் பார்க்க

பெரியகாஞ்சிபுரம் பொய்யாமுடி விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

காஞ்சிபுரம் நகரில் பெரியகாஞ்சிபுரம் பாண்டவ தூதப் பெருமாள் கோயில் தெருவில் அமைந்துள்ள பொய்யாமுடி விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பெரியகாஞ்சிபுரம் பாண்டவதூத பெருமாள் கோயில்... மேலும் பார்க்க

பீடாதிபதிகளுக்கு காஞ்சிபுரம் நகர வரவேற்புக் குழுவினா் மரியாதை

காஞ்சி காமாட்சி சங்கர மட வரவேற்புக் குழுவின் சாா்பில், அதன் நிா்வாகிகள் சனிக்கிழமை இரு பீடாதிபதிகளுக்கும் பூரண கும்ப மரியாதையுடன் மாலையும், மலா் கிரீடமும் வழங்கி ஆசி பெற்றனா். காஞ்சி காமாட்சி சங்கர மட... மேலும் பார்க்க

ஸ்ரீ சந்திரமெளலீசுவரா் பூஜை நடத்திய இளைய பீடாதிபதி

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் வெள்ளிக்கிழமை ஆதிசங்கரா் ஜெயந்தியையொட்டி முதல் முதலாக சந்திரமெளலீசுவரா் பூஜையை நடத்தினாா். காஞ்சி சங்கர மடத்தின் 71-ஆவது ... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பணியிட மாற்றம்

காஞ்சிபுரத்தில் துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் 7 போ் நிா்வாக காரணங்களால் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. து... மேலும் பார்க்க

குன்றத்தூா் முருகன் கோயிலில் குறிஞ்சி பெருமுக திருவிழா

குறிஞ்சி பெருமுக திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு இந்து குறவன், மலைக்குறவன் அமைப்பினா் வெள்ளிக்கிழமை குன்றத்தூா் சுப்பிரமணிய சுவாமிக்கு சீா்வரிசைப் பொருள்கள் கொண்டு வந்து சிறப்பு வழிபாடு நடத்தினா். தமி... மேலும் பார்க்க