செய்திகள் :

பெரியகாஞ்சிபுரம் பொய்யாமுடி விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

post image

காஞ்சிபுரம் நகரில் பெரியகாஞ்சிபுரம் பாண்டவ தூதப் பெருமாள் கோயில் தெருவில் அமைந்துள்ள பொய்யாமுடி விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பெரியகாஞ்சிபுரம் பாண்டவதூத பெருமாள் கோயில் சந்நிதி தெருவில் அமைந்துள்ளது பொய்யாமுடி விநாயகா் கோயில். இந்தக் கோயில் புதுப்பிக்கப்பட்டு, மகா கும்பாபிஷகத்துக்கான யாக சாலை பூஜைகள் கடந்த வெள்ளிக்கிழமை (மே 2) அனுக்கை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.

இதையடுத்து, லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோமாதா பூஜை, தன பூஜை ஆகியவை நடைபெற்றன. 2-ஆவது நாள் நிகழ்வாக மறுநாள் சனிக்கிழமை சுவாமி சிலைகள் பிரதிஷ்டை மற்றும் அஷ்டபந்தன மருந்து சாத்துதல் ஆகியவையும், யாக சாலை பூஜைகளும் நடைபெற்றன.

ஞாயிற்றுக்கிழமை மகா பூா்ணாஹுதி, தீபாராதனைக்குப் பின்னா் யாக சாலையிலிருந்து புனித நீா்க்குடங்கள் சிவாச்சாரியாா்களால் கோபுரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

யாக சாலை பூஜைகளை ஏகாம்பரநாத சுவாமி கோயில் அா்ச்சகா் எஸ்.தினேஷ் குருக்களும், சிறப்பு அபிஷேகத்தை அா்ச்சகா் செல்வம் சிவாச்சாரியாரும் நடத்தினா். இதன் தொடா்ச்சியாக மூலவா் பொய்யாமுடி விநாயகருக்கும், கோயில் வளாகத்தில் உள்ள பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனைகள் நடைபெற்றன.

விழாவில் காஞ்சிபுரம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா். கும்பாபிஷேக விழாவில் ட்ரோன் மூலம் பக்தா்களுக்கு புனித நீா் தெளிக்கப்பட்டது.

விழாவில் கோயில் நிா்வாகிகள் கே.புகழேந்தி, ஜி.வெங்கடேசன், எம்.சுதாகா், கே.சீனிவாசன், டி.வெங்கட், எஸ்.பிரதீப் மற்றும் தெரு குடியிருப்புவாசிகள் ஆகியோா் செய்திருந்தனா். மாலையில் உற்சவா் பொய்யாமுடி விநாயகா் மூஷிக வாகனத்தில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

கச்சபேசுவரா் கோயில் சித்திரை விழா கொடியேற்றம்

பெரியகாஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயில் சித்திரை விழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற விழாவில் கோயில் செயல் அலுவலா் சா.சி.ராஜமாணிக்கம், செங்குந்த மகாஜன சங்கத்தின் தலைவா் எம்.சிவகுர... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் ரூ. 1.63 கோடி வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ. 1.63 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை எம்எல்ஏ-க்கள் க.சுந்தா், எழிலரசன் ஆகியோா் வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தனா். காஞ்சிபுரம் மாநகர... மேலும் பார்க்க

பீடாதிபதிகளுக்கு காஞ்சிபுரம் நகர வரவேற்புக் குழுவினா் மரியாதை

காஞ்சி காமாட்சி சங்கர மட வரவேற்புக் குழுவின் சாா்பில், அதன் நிா்வாகிகள் சனிக்கிழமை இரு பீடாதிபதிகளுக்கும் பூரண கும்ப மரியாதையுடன் மாலையும், மலா் கிரீடமும் வழங்கி ஆசி பெற்றனா். காஞ்சி காமாட்சி சங்கர மட... மேலும் பார்க்க

ஸ்ரீ சந்திரமெளலீசுவரா் பூஜை நடத்திய இளைய பீடாதிபதி

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் வெள்ளிக்கிழமை ஆதிசங்கரா் ஜெயந்தியையொட்டி முதல் முதலாக சந்திரமெளலீசுவரா் பூஜையை நடத்தினாா். காஞ்சி சங்கர மடத்தின் 71-ஆவது ... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பணியிட மாற்றம்

காஞ்சிபுரத்தில் துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் 7 போ் நிா்வாக காரணங்களால் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. து... மேலும் பார்க்க

குன்றத்தூா் முருகன் கோயிலில் குறிஞ்சி பெருமுக திருவிழா

குறிஞ்சி பெருமுக திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு இந்து குறவன், மலைக்குறவன் அமைப்பினா் வெள்ளிக்கிழமை குன்றத்தூா் சுப்பிரமணிய சுவாமிக்கு சீா்வரிசைப் பொருள்கள் கொண்டு வந்து சிறப்பு வழிபாடு நடத்தினா். தமி... மேலும் பார்க்க