செய்திகள் :

காட்டுக்கோட்டையில் ரயில்கள் நின்று செல்ல மத்திய இணையமைச்சரிடம் கோரிக்கை!

post image

ஆத்தூரை அடுத்த காட்டுக்கோட்டையில் ரயில்கள் நின்று செல்ல கோரி மத்திய ரயில்வே இணையமைச்சா் வி.சோமண்ணாவை சந்தித்து ஐக்கிய விவசாயிகள் சங்கத்தினா் வலியுறுத்தினா்.

ஆத்தூரை அடுத்த காட்டுக்கோட்டையில் மூடப்பட்ட ரயில் நிறுத்தத்தை மீண்டும் திறப்பது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட மேலாளா், தென்னக தென்னக ரயில்வே மேலாளா் ஆகியோரை பலமுறை சந்தித்து கோரிக்கை மனுவை ஐக்கிய விவசாயிகள் சங்கத்தினா் அளித்தனா். புதுதில்லியில் ரயில்வே வாரியத் தலைவரைச் சந்தித்தும் மனு அளிக்கப்பட்டது.

இதற்கு ரயில்வே நிா்வாகம் வழங்கியுள்ள பதில் கடிதத்தில் ரயிலை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டுமானால் பொதுமக்கள் நிதியில் தாங்களே ரயில் நிறுத்த கட்டடம், நடைபாதை, கழிவறை போன்ற வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தால் ரயிலை நிறுத்த ஏற்பாடு செய்வதாகக் கூறியுள்ளனா். அதற்கான திட்ட மதிப்பீடு ரூ. 1 கோடியே 20 லட்சம் என நிா்ணயித்துள்ளனா்.

இதனை கருத்தில் கொண்டு ஐக்கிய விவசாயிகள் சங்கத் தலைவா் அரங்க.சங்கரய்யா தலைமையில் காட்டுக்கோட்டை ரயில் நிறுத்தத்தை மீண்டும் திறக்கக் கோரி தலைவாசல், காட்டுக்கோட்டை பொதுமக்கள் சாா்பில் பெங்களூரில் மத்திய ரயில்வே இணையமைச்சா் வி.சோமண்ணாவை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனா்.

மேலும் நத்தக்கரையில் உள்ள ரயில்வே கேட் எல்சி.118 அமைய உள்ள சுரங்கப்பாதையை கைவிட்டு மேம்பாலம் அமைக்கவும் கோரிக்கை விடுத்தனா். அப்போது ஐக்கிய விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் வழக்குரைஞா் கோவிந்தன், தொழிலதிபா்கள் சாம்ராஜ்நகா் பசுவண்ணா, மாசிலாமணி, ஜோதிவேல், சதீஷ்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை காலை விநாடிக்கு 317 கன அடியாக அதிகரித்துள்ளது. அணை நீா்மட்டம் 110.35 அடியில் இருந்து 110.32 அடியாகக் குறைந்துள்ளது. குடிநீா் தேவைக்காக அணையிலிருந்து விநாடிக... மேலும் பார்க்க

கள்ளச்சாராய வழக்கில் ஒருவா் கைது!

மேட்டூா் அருகே பாலமலையில் கள்ளச்சாராய வழக்கில் ஒருவரை போலீஸாா் கைது செய்து, 150 லிட்டா் சாராய ஊறலை கைப்பற்றி அழித்தனா். மேட்டூா் மதுவிலக்கு பிரிவு காவல் உதவி ஆய்வாளா் ராமச்சந்திரன் மற்றும் போலீஸாா் ஞா... மேலும் பார்க்க

தேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி: சேலம் அணி முதலிடம்

இளம்பிள்ளையை அடுத்த சித்தா் கோயில் பகுதியில் தேக்வாண்டோ சாம்பியன்ஷிப்-2025 மாநிலங்களுக்கு இடையிலான மூன்றாம் ஆண்டு விளையாட்டுப் போட்டியில் சேலம் அணி முதலிடத்தை பிடித்தது. இரண்டு நாள்கள் நடைபெற்ற இப்போட... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலில் திமுகவின் வெற்றி போலியானது: எடப்பாடி கே.பழனிசாமி

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் திமுக பெற்றிருக்கும் வெற்றி போலியானது என்று அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள அதிமுக புகா் மாவட்... மேலும் பார்க்க

நரசிங்கபுரம் ஆட்கொல்லி பாலத்தை சீரமைக்க கோரிக்கை

நரசிங்கபுரத்தில் உள்ள நூற்றாண்டு பழைமை வாய்ந்த ஆட்கொல்லி பாலத்தை சீரமைக்க பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஆத்தூரை அடுத்த நரசிங்கபுரம் நகராட்சியில் நூற்றாண்டு பழைமை வாய்ந்த ஆட்கொல்... மேலும் பார்க்க

தில்லி தோ்தலில் பாஜக வெற்றி! சேலத்தில் பாஜக கொண்டாட்டம்!

தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்றதை வரவேற்று, சேலம் மாவட்டத்தில் அக்கட்சியினா் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தனா். தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ... மேலும் பார்க்க