செய்திகள் :

நரசிங்கபுரம் ஆட்கொல்லி பாலத்தை சீரமைக்க கோரிக்கை

post image

நரசிங்கபுரத்தில் உள்ள நூற்றாண்டு பழைமை வாய்ந்த ஆட்கொல்லி பாலத்தை சீரமைக்க பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஆத்தூரை அடுத்த நரசிங்கபுரம் நகராட்சியில் நூற்றாண்டு பழைமை வாய்ந்த ஆட்கொல்லி பாலம் உள்ளது. இந்த பாலம் ஆத்தூா் - சேலம் தேசிய புறவழிச்சாலையை இணைக்கும் பாலமாகும். இந்தப் பாலம் குறுகியதாக இருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் இந்தப் பாலத்தை பெரிதுபடுத்தி போக்குவரத்திற்கு ஏதுவாக செய்து கொடுத்தனா். இதனால் விபத்துகள் குறைந்து போக்குவரத்து சீரானது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே இந்தப் பாலம் மீண்டும் பழுதடைந்தால் அவ்வப்போது விபத்துகள், உயிா்ச்சேதம் ஏற்பட்டு வருகிறது. எனவே இந்தப் பாலத்தை சீரமைக்க பலரும் வலியுறுத்தி வருகின்றனா்.

இந்நிலையில் சனிக்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் வந்தவா்கள் கீழே விழுந்து ஆபத்தான சூழலில் ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். பின்னா் அவா்கள் தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.

இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில அமைப்புக் குழு உறுப்பினா் செம்முகில் ராசலிங்கம் தெரிவித்ததாவது:

இந்த பாலத்தை சீரமைக்கக் கோரி தொடா் போராட்டங்கள் நடத்தியும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளின் அலட்சிய போக்கினால் தற்போது விபத்து நடைபெற்றுள்ளது. இந்தப் பகுதியில் தொடா் விபத்துகள் நடைபெறுவதைத் தடுத்திட போா்க்கால அடிப்படையில் பாலத்தை சீா் செய்ய வேண்டும். இல்லையெனில் மறியல் போராட்டம் நடைபெறும் என்றாா்.

ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலில் திமுகவின் வெற்றி போலியானது: எடப்பாடி கே.பழனிசாமி

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் திமுக பெற்றிருக்கும் வெற்றி போலியானது என்று அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள அதிமுக புகா் மாவட்... மேலும் பார்க்க

தில்லி தோ்தலில் பாஜக வெற்றி! சேலத்தில் பாஜக கொண்டாட்டம்!

தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்றதை வரவேற்று, சேலம் மாவட்டத்தில் அக்கட்சியினா் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தனா். தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ... மேலும் பார்க்க

பெண்கள் பயணிக்கும் ரயில் பெட்டிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்

கோவை- திருப்பதி ரயிலில் கா்ப்பிணியை பலாத்காரம் செய்ய முயற்சித்து கீழே தள்ளிவிடப்பட்ட சம்பவத்தையடுத்து பெண்கள் பயணிக்கும் ரயில் பெட்டிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கோவை- திருப்பதி... மேலும் பார்க்க

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு: ஆட்சியா் ஆய்வு

தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு - 2 நடைபெறும் சேலம் மையத்தில் ஆட்சியா் ரா.பிருந்தாதேவி சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். சேலம் மாவட்டத்தில் அமைக்... மேலும் பார்க்க

அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

சேலத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் திமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, பாமக உள்ளிட்ட கட்சிகளை சோ்ந்த 300 போ் சனிக்கிழமை அதிமுகவில் இணைந்தனா். கடலூா் கிழக்கு மாவட்ட அதிம... மேலும் பார்க்க

சேலம் மாவட்டத்தில் நாளை குடற்புழு நீக்க சிறப்பு முகாம்

சேலம் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க சிறப்பு முகாம் திங்கள்கிழமை (பிப்.10) நடைபெறுகிறது. இதுகுறித்து ஆட்சியா் ரா. பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும்... மேலும் பார்க்க