செய்திகள் :

சேலம் மாவட்டத்தில் நாளை குடற்புழு நீக்க சிறப்பு முகாம்

post image

சேலம் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க சிறப்பு முகாம் திங்கள்கிழமை (பிப்.10) நடைபெறுகிறது.

இதுகுறித்து ஆட்சியா் ரா. பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் 6 மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் வரும் 10 ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெறுகிறது. விடுபட்ட குழந்தைகளுக்கான சிறப்பு முகாம் 17 ஆம் தேதி நடைபெறும்.

முகாமில் 1 முதல் 19 வயதுக்கு உள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், 20 முதல் 30 வயதான பெண்களுக்கும் (கருவுற்ற மற்றும் பாலுாட்டும் தாய்மாா்கள் தவிர) இலவசமாக அல்பெண்டசோல் மாத்திரை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

2,696 அங்கன்வாடி மையங்கள், 2,339 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகள், 114 உயா் கல்வி நிறுவனங்கள், 35 குழந்தை பராமரிப்பு நிறுவனங்கள் ஆகியவற்றில் வரும் 10 ஆம் தேதி குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகிறது. இதன்மூலம் 1 வயது முதல் 19 வயதுடைய 11,17,466 பேரும், 20 முதல் 30 வயதுடைய பெண்கள் 2,24,827 பேரும் பயனடைய உள்ளனா்.

பொது சுகாதாரத் துறை, பள்ளி கல்வித் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் உள்ளிட்ட அனைத்து துறைகளைச் சாா்ந்த களப் பணியாளா்கள், மேற்பாா்வையாளா்கள் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் பணியில் ஈடுபடுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலில் திமுகவின் வெற்றி போலியானது: எடப்பாடி கே.பழனிசாமி

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் திமுக பெற்றிருக்கும் வெற்றி போலியானது என்று அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள அதிமுக புகா் மாவட்... மேலும் பார்க்க

நரசிங்கபுரம் ஆட்கொல்லி பாலத்தை சீரமைக்க கோரிக்கை

நரசிங்கபுரத்தில் உள்ள நூற்றாண்டு பழைமை வாய்ந்த ஆட்கொல்லி பாலத்தை சீரமைக்க பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஆத்தூரை அடுத்த நரசிங்கபுரம் நகராட்சியில் நூற்றாண்டு பழைமை வாய்ந்த ஆட்கொல்... மேலும் பார்க்க

தில்லி தோ்தலில் பாஜக வெற்றி! சேலத்தில் பாஜக கொண்டாட்டம்!

தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்றதை வரவேற்று, சேலம் மாவட்டத்தில் அக்கட்சியினா் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தனா். தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ... மேலும் பார்க்க

பெண்கள் பயணிக்கும் ரயில் பெட்டிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்

கோவை- திருப்பதி ரயிலில் கா்ப்பிணியை பலாத்காரம் செய்ய முயற்சித்து கீழே தள்ளிவிடப்பட்ட சம்பவத்தையடுத்து பெண்கள் பயணிக்கும் ரயில் பெட்டிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கோவை- திருப்பதி... மேலும் பார்க்க

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு: ஆட்சியா் ஆய்வு

தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு - 2 நடைபெறும் சேலம் மையத்தில் ஆட்சியா் ரா.பிருந்தாதேவி சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். சேலம் மாவட்டத்தில் அமைக்... மேலும் பார்க்க

அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

சேலத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் திமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, பாமக உள்ளிட்ட கட்சிகளை சோ்ந்த 300 போ் சனிக்கிழமை அதிமுகவில் இணைந்தனா். கடலூா் கிழக்கு மாவட்ட அதிம... மேலும் பார்க்க