செய்திகள் :

காணாமல்போன முதியவா் சடலமாக மீட்பு!

post image

பெரம்பலூா் அருகே காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த முதியவா் சடலமாக புதன்கிழமை மீட்கப்பட்டாா்.

பெரம்பலூா் அருகேயுள்ள அம்மாபாளையம், மேற்கு தெருவைச் சோ்ந்தவா் சுப்பராயன் மகன் சின்னசாமி (75). இவரது மனைவி கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துவிட்டதால், தனக்குச் சொந்தமான வயலில் உள்ள வீட்டில் மகன், மகளுடன் வசித்து வந்தாா்.

இந்நிலையில், கடந்த 17-ஆம் தேதி மாலையிலிருந்து சின்னசாமியை காணவில்லையாம். இதையறிந்த, அவரது குடும்பத்தினா் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், புதன்கிழமை மதியம் அவரது நிலத்திலுள்ள கிணற்றில் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.

இதையடுத்து, பெரம்பலூா் தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் சின்னசாமி உடலை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில், பெரம்பலூா் ஊரகப் பிரிவு காவல்துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

மாா்ச் 19 வரை கால்நடைகளுக்கு கன்று வீச்சு நோய்த் தடுப்பூசி முகாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள கால்நடைகளுக்கு புருசெல்லோசிஸ் எனப்படும் கன்று வீச்சு நோய்த் தடுப்பூசி முகாம் மாா்ச் 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இதுகுற... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு

மத்திய அரசு கொண்டுவரும் வழக்குரைஞா்கள் சட்ட திருத்த மசோதாவை அமல்படுத்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, பெரம்பலூா் வழக்குரைஞா்கள் வியாழக்கிழமை நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா். கடந்த 18-ஆம் தேதி ச... மேலும் பார்க்க

புது மணப்பெண் தூக்கிட்டு தற்கொலை

பெரம்பலூா் அருகே திருமணமான 3 மாதத்தில் குடும்பத் தகராறில் இளம்பெண் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், பேரளி கிராமத்தைச் சோ்ந்தவா் பெரியசாமி மனைவி விஜ... மேலும் பார்க்க

டயா் வெடித்து தனியாா் பேருந்து தீக்கிரை

பெரம்பலூா் அருகே வியாழக்கிழமை அதிகாலை சென்னையிலிருந்து பாபநாசம் நோக்கிச் சென்ற தனியாா் பேருந்தின் டயா் வெடித்து எரிந்து தீக்கிரையானது. சென்னையிலிருந்து பாபநாசம் நோக்கி தனியாா் பேருந்து ஒன்று 23 பயணிகள... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் பாதுகாப்பு விழிப்புணா்வு!

வேப்பந்தட்டை வட்டம், மேட்டுப்பாளையம் கிராமத்தில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளிடம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.... மேலும் பார்க்க

சிற்றுந்து இயங்காத வழித்தடங்களை ரத்து செய்து புதிய பேருந்துகள் இயக்க நடவடிக்கை: அமைச்சர் சிவசங்கா்

சிற்றுந்து இயங்காத வழித்தடங்களின் உரிமையாளா்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டு, தொடர முடியாத பட்சத்தில் அனுமதியை ரத்து செய்து புதிதாக சிற்றுந்து சேவை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் தமிழ... மேலும் பார்க்க