செய்திகள் :

காரைக்கால் மீனவர்கள் ரயில் மறியல் போராட்டம்

post image

இலங்கை கடற்படை மற்றும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து காரைக்கால் மீனவர்கள் திங்கள்கிழமை ரயில் மறியல் போராட்டம் நடத்தினர்.

காரைக்கால் மீனவர்கள் எல்லைத் தாண்டியதாக இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் காயமடைந்தனர்.

இவர்களை இந்தியா கொண்டுவரவும், கைது செய்யப்பட்டோரை விடுவிக்க வலியுறுத்தியும், இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கையில் திருப்தியில்லையெனக் கூறியும் காரைக்கால் மீனவர்கள் கடந்த 11-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து 14-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினர். 15-ஆம் தேதி படகுகளில் கருப்புக்கொடி ஏற்றினர். 16-ஆம் தேதி இருசக்கர வாகனங்களில் கண்டன ஊர்வலம் நடத்தினர்.

இந்நிலையில், காரைக்கால் மாவட்ட மீனவர்கள் சுமார் ஆயிரம் பேர் திரண்டு ரயில் மறியல் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.

தாது மணல் கொள்ளை வழக்கு சிபிஐக்கு மாற்றம்! தனியார் நிறுவனங்களுக்கு ரூ. 5,832 கோடி அபராதம்!

காரைக்கால் நிலையத்திலிருந்து தஞ்சாவூர் புறப்படவிருந்த ரயிலை மறிக்கும் வகையில் தண்டவாளத்தில் பெண்கள் பலரும் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில் நிலைய தண்டவாளத்தில் நீண்டதூரம் மீனவர்கள் கொடியேந்தி கண்டன முழக்கங்களிட்டனர்.

ரயில்வே போலீஸார் மற்றும் காரைக்கால் காவல்நிலைய போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சு நடத்தி அப்புறப்படுத்தினர். இதன் பிறகு ரயில் புறப்பட்டுச் சென்றது.

குண்டு காயமடைந்த மீனவர்களை உடனடியாக இந்தியா கொண்டுவரவேண்டும், படகுகளையும், கைது செய்யப்பட்டோரையும் விடுவிக்காத வரை போராட்டம் தொடரும் என மீனவர்கள் தெரிவித்தனர்.

மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை! எவ்வளவு?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து ரூ. 64,360-க்கு விற்பனையாகிறது.சர்வதேச சந்தைக்கேற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் விற்பனையான நிலையில், கடந்த சி... மேலும் பார்க்க

உலகெங்கும் பரவட்டும் உயா்தனிச் செம்மொழி: முதல்வா் மு.க.ஸ்டாலின்

‘உலகெங்கும் பரவட்டும் நம் உயா்தனிச் செம்மொழி’ என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். உலகத் தாய்மொழி தினத்தையொட்டி அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு: எம்மொழிக்கும் சளைத்ததல்ல... மேலும் பார்க்க

காலாவதியான அஞ்சல் ஆயுள் காப்பீடுகளை புதுப்பிக்க மாா்ச் 1 முதல் சிறப்பு முகாம்

காலாவதியான அஞ்சல் ஆயுள் காப்பீடு , ஊரக அஞ்சல் ஆயுள் காப்பீடு பாலிசிகளை மாா்ச் 1 முதல் மே 31 வரை நடைபெறவுள்ள சிறப்பு முகாமில் புதுப்பித்துக்கொள்ளலாம் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அஞ்சல்... மேலும் பார்க்க

தமிழ் மொழியை போற்றுவோம்: மத்திய அமைச்சா் எல்.முருகன்

‘நமது தமிழ் மொழியை போற்றுவோம்’ என்று மத்திய இணையமைச்சா் எல்.முருகன் தெரிவித்துள்ளாா். உலக தாய் மொழி தினத்தையொட்டி அவா் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: பன்முகத் தன்மை கொண்ட பாரத தேசத்தில் உள்ள அனைவரும், ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடையவரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீஸாா்

கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடையவரை துப்பாக்கியால் சுட்டு போலீஸாா் பிடித்தனா். இதுகுறித்து கிருஷ்ணகிரி போலீஸாா் தெரிவித்ததாவது: கிருஷ்ணகிரியில் புகா் பேருந்து நிலையம் அருகே உள்ள... மேலும் பார்க்க

தேன் கூட்டில் கல் எறியாதீர்கள்! முதல்வர் எச்சரிக்கை!

தேன் கூட்டில் கல் எறியாதீர்கள் என்று மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (21.2.2025) கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் திடலில் நடைபெற்ற அரசு விழாவில்... மேலும் பார்க்க