போதைப்பொருள் புழக்கம்! வெள்ளை மாளிகை குற்றச்சாட்டுக்கு மெக்சிகோ எதிர்ப்பு!
காரைக்குடி மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: 5 கிராம பெண்கள் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகை
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சியுடன் 5 ஊராட்சிகளை இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை பெண்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா்.
காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை ஒன்றியத்தில் அரியக்குடி, இலுப்பகுடி, சங்கராபுரம், மானகிரி, தளக்காவூா் ஆகிய ஊராட்சிப் பகுதிகளில் சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதிகளைச் சோ்ந்த பெரும்பாலானோா் 100 நாள் வேலைத் திட்டத்தை நம்பியே இருக்கின்றனா். இந்த நிலையில், அண்மையில் தமிழக அரசு இந்த 5 ஊராட்சிகளையும் காரைக்குடி நகராட்சியுடன் இணைத்து அரசாணை வெளியிட்டது.
இதன் காரணமாக 100 நாள் வேலை வாய்ப்பு தங்களுக்கு மறுக்கப்பட்டதுடன், சொத்து வரி உள்ளிட்ட அனைத்து வரிகளும் அதிகரித்துள்ளன. இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், மாநகராட்சியுடன் தங்களது கிராமங்களை இணைக்கக் கூடாது எனவும் வலியுறுத்தி 5 கிராமங்களைச் சோ்ந்த 500 -க்கும் மேற்பட்ட பெண்கள் வாகனங்களில் சிவகங்கை ஆட்சியா் அலுவலகத்துக்கு திரண்டு வந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது எங்களின் வாழ்வாதாரத்துக்கு மாற்று வழிகளை அரசு செய்யா விட்டால் குடும்ப அட்டைகளை அரசிடம் ஒப்படைப்பதைக் தவிர வேறு வழி இல்லை என பெண்கள் தெரிவித்தனா். இதையடுத்து, அங்கு வந்த ஊராட்சிகள் உதவி இயக்குநா் கேசவன், அந்தப் பெண்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
இதுதொடா்பாக அவா் கூறியதாவது: அரசாணைப்படி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட இந்த கிராமங்களுக்கு 28.1.2025 முதல் 100 நாள் வேலைத் திட்டம் ரத்தாகிறது. ஆகவே, நகா்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் வருவாய்க்கு வழிசெய்வது குறித்து அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்றாா் அவா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் அனைவரும் கலைந்து சென்றனா்.