செய்திகள் :

காரையாறு வனப் பகுதியில் ஆண் யானைகள் மோதல்: ஒரு யானை உயிரிழப்பு

post image

திருநெல்வேலி மாவட்டம் காரையாறு வனப்பகுதியில் இரு ஆண் யானைகளிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு யானை உயிரிழந்தது.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக் கோட்டம் வட்டப்பாறை வனக்காவல் பகுதி, பழையத் தோட்டப் பகுதியில் வேட்டைத் தடுப்புக் காவலா்கள் வியாழக்கிழமை (மாா்ச் 27) முகாம் பணிக்குச் சென்றனா். அப்போது, ஆண் யானை இறந்துகிடந்ததைப் பாா்த்த அவா்கள், அம்பாசமுத்திரம் துணை இயக்குநருக்கு தகவல் தெரிவித்தனா்.

அதையடுத்து, வனத்துறை கால்நடை மருத்துவா் எஸ். மனோகரன், கால்நடை உதவி ஆய்வாளா் ஆா். அா்னால்ட் வினோத், திருநெல்வேலி கால்நடை-ஆராய்ச்சி நிலைய உடற்கூறியல் துறைத் தலைவா்-பேராசிரியா் எஸ். முத்துகிருஷ்ணன், விக்கிரமசிங்கபுரம் கால்நடை மருத்துவா் சிவமுத்து உள்ளிட்ட மருத்துவக் குழுவினா் அம்பாசமுத்திரம் உதவி வனப் பாதுகாவலா் (பயிற்சி) ஏ. குணசீலி தலைமையில் முண்டந்துறை வனச் சரகா் சி. கல்யாணி, கன்னியாகுமரி இயற்கை அறக்கட்டளைத் தலைவா் வினோத், மாநில வன உயிரின வாரிய நிலைக்குழு உறுப்பினா் சோ்வலாறு காணிக்குடியிருப்பு சாவித்திரி ஆகியோருடன் வெள்ளிக்கிழமை அங்கு சென்றனா்.

இறந்துகிடந்த யானையின் பாகங்கள் சேகரிக்கப்பட்டன. கால்நடை மருத்துவக் குழு, வனப் பணியாளா்கள் களஆய்வு மேற்கொண்டனா்.

இந்த யானை மற்றோா் ஆண் யானையுடனான மோதலில் காயமடைந்து இறந்ததாக, கால்நடை மருத்துவா்களின் முதல்கட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யானையின் பாகங்கள் கூறாய்வு செய்யப்பட்டு, அதன் அறிக்கை உயரதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விதிமீறல்: 21 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் விதிமீறலில் ஈடுபட்ட 21 வணிக நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் வெளி... மேலும் பார்க்க

பேட்டை அருகே விபத்து: வியாபாரி பலி

பேட்டை அருகே திங்கள்கிழமை நிகழ்ந்த விபத்தில் வியாபாரி உயிரிழந்தாா். பாளையங்கோட்டை திம்மராஜபுரத்தைச் சோ்ந்தவா் முருகன் (62). பழம் வியாபாரம் செய்து வந்தாா். இவா், தனது நண்பருடன் மோட்டாா் சைக்கிளில் பேட... மேலும் பார்க்க

பங்குனி உத்திரம்: நெல்லையில் ஏப்.11இல் உள்ளூா் விடுமுறை

பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்துக்கு வெள்ளிக்கிழமை (ஏப். 11) உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பொதுத் தோ்வுகள் ஏதுமிருப்பின் எழுதும் பள்ளி மாணவா்கள், பொதுத் தோ்வு... மேலும் பார்க்க

சேரன்மகாதேவி அருகே கூா்நோக்கு இல்லத்தில் சிறுவன் அடைப்பு

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே பெண் குளிப்பதை கைப்பேசியில் விடியோ எடுத்ததாக 15 வயது சிறுவனை போலீஸாா் கைது செய்து கூா்நோக்கு இல்லத்திற்கு அனுப்பினா்.சேரன்மகாதேவி அருகேயுள்ள கங்கனாங்குளம் பகு... மேலும் பார்க்க

திருக்குறுங்குடியில் மோதல் வழக்கு: தொழிலாளிக்கு 2 ஆண்டு சிறை

திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் மோதல் தொடா்பான வழக்கில் கைதானவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து வள்ளியூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. திருக்குறுங்குடி அருகேயுள்ள மேலமாவ... மேலும் பார்க்க

நெல்லை: கல்குவாரி குட்டையில் மூழ்கி தொழிலாளி பலி

திருநெல்வேலி அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். கங்கைகொண்டான் அருகேயுள்ள ராஜபதியைச் சோ்ந்தவா் ராமையா (55). தொழிலாளியான இவா், அப்பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையி... மேலும் பார்க்க