செய்திகள் :

கார் ஓட்டும்போது கருப்பு நிற ஷர்ட் அணியக்கூடாதா?

post image

பொதுவாகவே வாகன ஓட்டிகளுக்கு பல விதிமுறைகள் வகுக்கப்பட்டு, அவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும், இல்லாவிட்டால் அபராதம் விதிக்கும் நிலை நடைமுறையில் உள்ளது.

ஆனால், கார் ஓட்டும்போது கருப்பு நிற ஷர்ட் அணியக் கூடாது, அணிந்தால் ரூ.1000 அபராதம் வசூலிக்கப்படும் என்று தற்போது சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

இது சாலை விதிமுறை அல்ல... சொல்வதற்கும் காரணம் இருக்கிறது. அதாவது, கார் ஓட்டும்போது, கருப்பு நிற சட்டை அல்லது டி-ஷர்ட் அணிவதால் சாலையோரங்களில் இருக்கும் செயற்கை நுண்ணறிவு கேமராக்களால், நீங்கள் அணிந்திருக்கும் சீட் பெல்ட்டை அடையாளம் காண முடியாமல் போகலாம். இதனால், சீட் பெல்ட் அணியவில்லை என்று கூறி, தேவையின்றி ரூ.1,000 அபராதம் விதிக்கப்படலாம் என்கின்றன தகவல்கள்.

கருப்பு மற்றும் அடர் நிற ஆடைகளை அணிந்திருப்பவர்கள், சீட் பெல்ட் அணிந்திருப்பதை, சில சிசிடிவி கேமராக்களால் தனித்துக் கவனிக்க முடியாமல் போவதாகவும், அதனால் அ பராதம் விதிக்கப்படுவதாகவும் கடந்த காலங்களில் பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்துள்ளன.

தற்போது, சாலை விதிகளை, வாகன ஓட்டிகள் பின்பற்ற வைப்பதில், கேமராக்கள்தான் முக்கியப் பங்காற்றுகின்றன. ஹெல்மெட் போடாமல் வாகனம் ஓட்டினால், பின்னால் அமர்ந்திருப்பவர் ஹெல்மெட் அணியாமல் வந்தால், புகைப்படத்துடன் வாகன ஓட்டிக்கு அபராதம் விதிக்கப்படும் தகவல் வந்துவிடுகிறது.

இதனால்தான், தானியங்கி கேமரா வசதியுடன் அபராதம் விதிக்கப்படும் வசதி கொண்ட பகுதிகளில் அடர்நிற ஆடை அணிந்திருப்பவர்களுக்குத் தேவையற்ற அபராதங்கள் விதிக்கப்படும் நிலையும் ஏற்படுகிறது.

அண்மையில், இதுபோன்று தவறாக அடையாளம் காணப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டதாக, தானியங்கி கேமராக்கள் அதிகம் இருக்கும் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் ஏராளமானோர் சமூக வலைதளங்களில் புகார் அளித்திருந்தனர்.

அதாவது, சீட் பெல்ட் நிறமும், அணிந்திருக்கும் கோட் அல்லது ஷர்ட் நிறமும் ஒன்றாக இருப்பதால், தாங்கள் சீட் பெல்ட் அணிந்திருந்தாலும் கூட அபராதத்துக்கான செல்லான் வந்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

எனவே, கார் தயாரிப்பு நிறுவனங்கள், வித்தியாசமான நிறங்களில் சீல் பெல்ட்களை தயாரிக்க வேண்டும் என்றும் அவர்கள் யோசனை தெரிவித்திருந்தனர். அதுவரை கார் ஓட்டிகள்தான் கவனமாக இருக்க வேண்டும்.

மணிப்பூரில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் -கட்டடங்களில் விரிசல்; மக்கள் பீதி

இம்பால்/ஷில்லாங்/குவாஹாட்டி : மணிப்பூரில் புதன்கிழமை அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இவற்றின் தாக்கத்தால், பல கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டது; பொது மக்கள் பீதிக்கு உள்ளாகினா். அஸ்ஸாம், மேகாலயம்... மேலும் பார்க்க

அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4% இடஒதுக்கீடு: கர்நாடக அரசு முடிவு!

அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4% இடஒதுக்கீடு வழங்க கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது. கர்நாடகத்தில் பொதுக் கொள்முதல் சட்ட வெளிப்படைத் தன்மையின் கீழ் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு கொண்டு வரப்படவுள்ளத... மேலும் பார்க்க

30 முறை துபை சென்ற நடிகை! தங்கம் கடத்தவா? வெளியான தகவல்

பெங்களூரு விமான நிலையத்தில் ரூ. 12.56 கோடி மதிப்புடைய 14. 8 கிலோ தங்கம் கடத்திச் சென்றதாக கன்னட நடிகை ரன்யா ராவ் நேற்று முன்தினம் (மார்ச் 3) கைது செய்யப்பட்டார். சினிமா நடிகை என்ற புகழைப் பயன்படுத்தி ... மேலும் பார்க்க

அமெரிக்காவில் சட்டவிரோதமாக இந்தியர்களை குடியேற்றும் குஜராத் ஏஜென்டுகள்!

சட்டவிரோதமாக இந்தியர்களை நாடுகடத்தும் ஏஜென்டுகளில் பெரும்பாலானோர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள் என்று அமலாக்கத் துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.சட்டவிரோதமாக இந்தியர்களை நாடுகடத்தும் ஏஜென்டுகள் குறித்து ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பிடியில் 144 இந்திய மீனவர்கள், 1173 படகுகள்!

குஜராத்தைச் சேர்ந்த 144 மீனவர்களையும் 1173 படகுகளையும் பாகிஸ்தான் சிறைபிடித்து வைத்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. மீனவர்கள் கைதுபாகிஸ்தானில் பிடித்து வைக்கப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் படகுகளின் நிலைமை... மேலும் பார்க்க

10 ஆண்டுகளில் 66% பொருளாதார வளர்ச்சி: பிரதமர் பெருமிதம்

மற்ற நாடுகளைவிட இந்திய பொருளாதார வளர்ச்சி அதிகமானது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.மத்திய பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழி கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, வேலைவாய்ப்புகளை உருவ... மேலும் பார்க்க