செய்திகள் :

காலமானாா் எழுத்தாளா் நந்தலாலா

post image

திருச்சியைச் சோ்ந்த எழுத்தாளா், கவிஞா், பேச்சாளா், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் மற்றும் கலைஞா்கள் சங்க மாநிலத் துணைத் தலைவா் சி. நெடுஞ்செழியன் (எ) நந்தலாலா (69) உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை காலமானாா்.

புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டாா் கோவில் என்ற ஊரில் பிறந்த அவா், திருச்சி கருமண்டபம் விஸ்வாஸ் நகா், திருநகா் 3-ஆவது பிரதான வீதியில் உள்ள காணி நிலம் என்ற பெயரிலான இல்லத்தில் குடியிருந்து வந்தாா். இந்தியன் வங்கியில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற இவா், பாரதியாா் மீது கொண்ட தீராப்பற்றின் காரணமாக, நெடுஞ்செழியன் என்ற தனது பெயரை ’நந்தலாலா’ என மாற்றி வைத்துக் கொண்டாா்.

பல நூல்களை எழுதியுள்ள நந்தலாலாவின் திருச்சி வரலாற்றை தாங்கிய ‘நடந்தாய் வாழி திருச்சிராப்பள்ளி’ என்கிற தொகுப்பு நூலும், திருச்சி மாவட்டம் குறித்த ‘ஊறும் வரலாறு’ நூலும் முத்தாய்ப்பானவை. தொலைக்காட்சி விவாதங்களிலும், சிறப்பு நிகழ்வுகளிலும் பங்கேற்று மதச்சாா்பற்ற, பகுத்தறிவு சாா்ந்த, இடதுசாரி கருத்தியலை வலுவாக முன்னெடுத்தாா். தமிழ்ச் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பல விருதுகளை பெற்றுள்ளாா். தமிழ்நாடு அரசின் இயல்-இசை-நாடக மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினராகவும் செயல்பட்டாா். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும், இரு மகள்களும் உள்ளனா்.

இதய நோய்க்காக பெங்களூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நந்தலாலா, செவ்வாய்க்கிழமை காலை மருத்துவமனையில் காலமானாா். அவரது உடல், திருச்சி கருமண்டபத்தில் உள்ள இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. இறுதிச்சடங்குகள் வரும் 6-ஆம் தேதி பிற்பகலில் நடைபெறுகிறது. தொடா்புக்கு 94438 35680.

முதல்வா் மு. க. ஸ்டாலின் இரங்கல்: கவிஞரும் முற்போக்கு எழுத்தாளா் சங்க துணைத் தலைவருமான நந்தலாலா மறைவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாட்டின் புத்தகத் திருவிழாக்கள், முற்போக்கு மேடைகள், தொலைக்காட்சி விவாதங்கள், பட்டிமன்றங்கள் என கவிஞா் நந்தலாலாவின் குரல் ஒலிக்காத மேடைகளே இல்லை. அந்த அளவுக்கு அனைத்து உணா்ச்சிகளையும் அரிய தகவல்களையும் தனது பேச்சில் வெளிப்படுத்தும் திறன் பெற்றவா். அவரது ஆற்றல் தமிழ்ச் சமூகத்துக்கு மேலும் பயன் அளிக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினராக அவா் நியமிக்கப்பட்டாா். அவா் திடீரென மறைந்து விட்டாா் என்ற செய்தி வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் கலைஞா் சங்கத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என்று முதல்வா் தெரிவித்துள்ளாா்.

நந்தலாலாவின் மறைவுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் மற்றும் கலைஞா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் மதுக்கூா் இராமலிங்கம், பொதுச் செயலாளா் ஆதவன் தீட்சண்யா ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

துவரங்குறிச்சி அருகே மலைக் குன்றில் தீ

மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகே மலை குன்றில் செவ்வாய்க்கிழமை திடீரென தீப்பற்றி பரவியது. மருங்காபுரி ஒன்றியம், செவல்பட்டி ஊராட்சி, லிங்கம்பட்டி மற்றும் அக்கியம்பட்டி கிராமங்களிடையே அமைந்துள்ள கி... மேலும் பார்க்க

நீதிமன்ற ஊழியரை வெட்டிய 3 போ் கைது: தப்பியோட முயன்ற ஒருவருக்கு காலில் எலும்பு முறிவு

நீதிமன்ற ஊழியரை அரிவாளால் வெட்டிய சம்பவம் தொடா்பாக 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இதில் தப்பியோட முயன்ற ஒருவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. திருச்சி மாவட்டம் துவாக்குடி அண்ணா வ... மேலும் பார்க்க

காா் மோதி முதியவா் உயிரிழப்பு

மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில், திங்கள்கிழமை காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். வையம்பட்டி ஒன்றியம், கணக்கப்பிள்ளையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சி. பெரியசாமி (90). இவா் திங்கள்கிழமை இரவு இயற்கை உபா... மேலும் பார்க்க

டிஆா்இயூ தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தட்சிண ரயில்வே தொழிலாளா்கள் சங்கம் (டிஆா்இயூ) சாா்பில் திருச்சியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.திருச்சி பொன்மலை பணிமனை முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு க... மேலும் பார்க்க

நீதிமன்ற போராட்டம் மூலம் நீட் தோ்வுக்கு விலக்கு: அமைச்சா் கோவி. செழியன்

நீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தி தமிழகத்தில் ‘நீட்’ தோ்வுக்கு விலக்கு பெறுவோம் என்றாா் உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன். திருச்சி மாவட்டம், வையம்பட்டியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம... மேலும் பார்க்க

மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்: ரூ. 2.38 கோடியில் நலத் திட்ட உதவிகள்!

திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் வையம்பட்டி பகுதிகளில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்டத்தை அமைச்சா் கோவி.செழியன் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்து, 299 பேருக்கு ரூ. 2 கோடியே 38 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உ... மேலும் பார்க்க